மதுரை, ஏப்.17- மதுரை மாவட்டம் பெருங்குடி ஊராட்சியில் உள்ள ஈஸ்வரன் நகரில் வசிக்கும் 246 அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டடி மனைகளை பய னாளிகள் நலன் கருதி ரத்து செய்யக் கூடாது. புதிய நபர்களை அந்த இடத்திற் குத் தேர்வு செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏற்க னவே பட்டா பெற்ற நில உரி மையாளர்களுக்கு வீடு கட்டு வதற்கு கால அவகாசம் வழங்க வலியுறுத்தி ஆட்சி யர் எஸ்.அனீஸ்சேகரிடம் மதுரை துணை மேயர் டி. நாகராஜன், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி யின் மதுரை புறநகர் மாவட் டத் தலைவர் செ.ஆஞ்சி, புற நகர் மாவட்டச் செயலாளர் செ.முத்துராணி, மாநகர் மாவட்டச் செயலாளர் எம். பாலசுப்பிரமணியன், மாவட் டத் துணைத் தலைவர் ஜெ. பார்த்தசாரதி, ஆதிதிராவிட நலக் குழு (திமுக) மாவட்ட அமைப்பாளர் இ.எல். பாலா, மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க (சிஐடியு) நிர்வாகி ரவி ஆகியோர் கோரிக்கை மனு அளித்த னர்.