tamilnadu

img

கல்லீரல் நோய் சிறப்பு மாநாடு

சென்னை, ஜன.29- கல்லீரல் நோய் குறித்த சிறப்பு மாநாடு சென்னையில் வெள்ளி யன்று (ஜன.27)  தொடங்கி யது. இது ஞாயிறன்று  ( ஜன 29) நிறைவடைகிறது.  ரேலா மருத்துவமனை யுடன் இணைந்து சர்வதேச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கமும், சர்வதேச வாழும் நன்கொடையாளர் கல்லீரல் மாற்று ஆய்வுக்குழு மற்றும் இந்திய கல்லீரல் மாற்று சிகிச்சையாளர்கள் சங்கமும் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்தி ருந்தன. உயிருள்ள ஒருவரிட மிருந்து பெற்று மேற்கொள்ளப்படும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் ஏற்படும் நோய் அதன் அளவு குறித்தும் தானம்பெற்ற வர் தனது உடலை தொடர்ந்து எப்படி பராமரிக்க வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்தமாநாடு அமைந்திருந்ததாக   சர்வ தேச கல்லீரல் உறுப்பு மாற்று சங்கத்தின் தலை வரும் ரேலா மருத்துவ மனையின் தலை வருமான பேராசிரியர் முகமது ரேலா கூறினார். சென்னையில் சனிக்கிழமை யன்று (ஜன.28) செய்தியாளர்களி டம் பேசிய அவர், அமெரிக்காவின் உறுப்பு மாற்று சங்கத்தின் தலை வர் டாக்டர். ஜான் ஃபங், ஜப்பானைச் சேர்ந்த உயிருள்ள தான மளிப்பவரது கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை சங்கத்தின் தலைவர் டாக்டர். `ஹிரோடோ எகாவா உள்ளிட்டோர் கருத்தரங்கில் பேசியதாக கூறினார். இந்த மாநாட்டில் “கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்த விவாதங்கள்” என்ற அமர்வும் இடம் பெற்றது. இதில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் தற்போதைய நடைமுறை குறித்து விரிவான அள வில் விவாதங்கள் நடை பெற்றதாகவும் அவர் கூறினார். ரோபோடிக் கல்லீரல் அறுவை சிகிச்சை பற்றிய ஒரு பயிலரங்கம்  ஞாயி றன்று (ஜன.29)  நடைபெற்றது. இதில் உயிருள்ள நன்கொடையாளருக்கு  ரோபோ மூலம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை முறை நேரடியாக ஒளிப்பரப்பப்பட்டது. கல்லீரல் மருத்துவ நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், அவசர சிகிச்சை மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டனர்.