tamilnadu

டாஸ்மாக் கடைகளில் ரூ.675 கோடிக்கு மது விற்பனை

சென்னை,ஜன.15- தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 675.19 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.  பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடை களில் மது விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். பொங்கலுக்கு மறுநாள் திருவள்ளூவர் தினம் கடைபி டிக்கப்படுவதால் மதுக்கடைகள் மூடப்படும். இந்த ஆண்டு பொது ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்ப டுத்தப்படுவதால் தொடர்ச்சியாக 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. அனைத்து மதுக்கடைகளும் மூடப் ்பட்டன. 2 நாட்கள் கடைகள் மூடப்பட்டதால் மது பிரி யர்கள் அதிக அளவு மதுபானங்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர். இதனால், சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்க ளிலும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பகல் நேரத்தைவிட இரவில் அதிகளவில் குவிந்தனர். பொங் ்கல் பண்டிகையையொட்டி உற்சாகமாக மது அருந்தி யவர்கள் பலர் 2 நாட்களுக்கு தேவையான மதுவகை களை வாங்கி சென்றனர். இருசக்கரம் மற்றும் கார் போன்ற வாகனங்களில் சென்று மதுபானங்களை மொத்த மாக வாங்கினார்கள். இரவு 10 மணிக்கு கடைகள் அடைக்க ப்பட்டதால் அதற்கு முன்னதாக மது பிரியர்கள் குவிந்த தால் ஒருசில கடைகளில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்த கடைகளில் பாதுகாப்பிற்கு போலீசாரும் நிறுத்தப்பட்டிருந்தனர். நேற்று ஒரே நாளில் ரூ.317.08 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டு உள்ளன. 12-ந் தேதி ரூ.155.6 கோடிக்கும், 13 ஆம் தேதி ரூ.203.5 கோடி க்கும் மது விற்பனை நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 675.19 கோடி க்கு மது விற்பனையாகி உள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.129.82 கோடிக்கு மது விற்பனையானது. ஒரே நாளில் சென்னையில் ரூ.59.28 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.65.52 கோடிக்கும், சேலம் ரூ.63.87 கோடிக்கும், கோவை ரூ.59.65 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது. அதிக பட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.68.76 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.