தமிழக அரசின் சத்துணவுத் திட்டம் 1982-ஆம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்டது. சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் இந்தியாவிலேயே ஒரு முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அரை வயிற்றுப் பசியுடன் ஆடு, மாடு மேய்த்து அலைந்து திரிந்த வருங்கால சமுதாய சிற்பிகளின் அவல நிலை அறிந்த தேசபக்தரும், அன்றைய தமிழக முதல்வருமான காமராஜர் அவர்களால் மதிய உணவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக் கையை அதிகரிக்கவும், மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதி செய்தி டவும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சர்வ சிக்சா அபியான் திட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் துவக்கப் பள்ளி குழந்தைகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கும் சூடான இலவச சத்துணவு வழங்கப்படுகிறது.
இத்திட்டம், கணவனால் கைவிடப்பட்ட வர்கள், விதவைப் பெண்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், படித்து வேலை இன்றி தவித்த இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் சிறப்பான திட்டமாக சத்துண வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிமுகவும் திமுகவும் மாறி மாறி தமிழ கத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோதும், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் இடை விடாத இயக்கங்கள் மூலம் ஆளும் அரசுகளி டமிருந்து இந்த திட்டத்தின் வளர்ச்சிக்கு தேவை யான அரசின் பங்களிப்பினை பெற்று அற்புத மான திட்டமாக செயல்படுத்தி வருகின்றனர் என்றால் அது மிகையல்ல. தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது என்று ஐநா சபையே பாராட்டும் அளவிற்கு இத்திட்டம் வளர்ச்சி அடைந்துள் ளது. இதுபோன்று உலகம் போற்றும் இத்திட்டத்தில் ஆட்சியாளர்களின் கொள்கை என்பது இருபத்தி ஐந்து குழந்தைகளுக்கு குறை வாக உள்ள 9 ஆயிரம் சத்துணவு மையங்களை யும், 10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள ஆயிரத்து 500 சத்துணவு மையங்களையும் மூடுவதாக உள்ளது. அவ்வாறு மையங்களை மூடுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்தது மட்டுமல்லாது, காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் அட்சயபாத்திரம் என்ற தொண்டு நிறுவனத்திற்கு தாரைவார்க்கும் வேலைகளில் ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரமாக இறங்கின.
காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, காலை உணவுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று ஊழியர்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத் தின் விளைவாக ஒன்றிய, மாநில அரசுகளின் நோக்கங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களின் பாதுகாவலனாக இருக்கும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், முப்பத்தி ஏழு ஆண்டுகளாக சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகளையும், பல்வேறு உரிமை களையும் சமரசமற்ற நிலையில் போராடிப் பெற்றுத் தந்துள்ளது. இந்தப் போராட்டங்க ளில் தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வோடு பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஊழியர்களின் உழைப்பால் வலிமையான சங்கமாக தமிழ கத்தில் உருவெடுத்துள்ளது. அதற்காகப் பாடு பட்ட மாநில, மாவட்ட, ஒன்றியக் கிளைகளில் சங்க பணியாற்றியவர்களின் அரும்பணியை தூத்துக்குடியில் மார்ச் 12, 13 தேதிகளில் நடை பெறவுள்ள மாநில மாநாடு நன்றியுடன் நினைவு கூர்கிறது.
போராட்டங்களை முன்னெடுத்து அதிகார வர்க்கத்திற்கு எதிராக வாதாட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு மற்ற அமைப்புகளை விட முன்னோடி அமைப்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் விளங்கி வருகிறது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை புறந்தள்ளிவிட்டு, சத்துணவு ஊழியர்களின் உரிமைகள் மீது கை வைத்து விடவோ அல்லது கைவிரித்து விடவோ முடியாத அளவுக்கு சத்துணவு ஊழியர்களின் பாதுகாப்பு கவ சமாக, அரணாக இன்று ஒரு பெரும் இயக்க மாக இச்சங்கம் விளங்குகிறது என்றால் அதற்கு காரணம் அரசு ஊழியர்களின் மகத்தான தலைவர் எம். ஆர். அப்பன் அவர்களும், அவரின் வழியில் நின்று வழிகாட்டிய தோழர்களின் அர்ப்பணிப்புமிக்க செயல் பாடுகளும், தொடர்ந்து நடத்திய போராட்டங்க ளும் தான் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. எந்த லட்சிய நோக்குடன் இந்த இயக்கம் துவங்கப்பட்டதோ, அந்த லட்சிய நோக்கத் திற்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் தொடர்ந்து ஊழியர்களின் உரிமைக்காக போராடி வரு கிறது தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம். 38 ஆண்டுகளாக சத்துணவுத் திட்டத்தை உன்னதமான திட்டமாக நடத்தி வரும் பெருமை சத்துணவு ஊழியர்களுக்கு உண்டு.
தன்னுடைய உழைப்பை எல்லாம் அரசாங்கத் துக்கு செலுத்தி விட்டு ஓய்வு பெறும் நிலை யில், ஓய்வூதியமாக ரூ. 2000 மட்டுமே அரசாங்கம் வழங்குகிறது. இத்தொகையானது, ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்திற்கான மருத்துவ செலவிற்குக் கூட உதவாது என்ற நிலை உள்ளது. எனவே, தமிழக அரசானது ஓய்வுபெறும் ஊழியர்க ளின் அவல நிலையை உணர்ந்து குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850/- ரூபாய் வழங்கி ஓய்வு பெறும் ஊழியர் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும். சத்துணவு ஊழியர்கள் அனைவ ருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒட்டுமொத்தத் தொகையாக அமைப்பாளர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் சமையல் உதவியாளர்களுக்கு மூன்று லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வென்றெடுக்கும் உறுதியுடன் மாநாட்டில் சங்கமிப்போம்!