தென்காசி, அக்.29- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் எல்ஐசி அலுவலகம் முன்பு லிகாய் சங்கம் சார்பில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை தலைவர் மூக்கையா தலை மை வகித்தார். செயலாளர் கணேசன், பொருளாளர் பெருமாள்சாமி, எல்ஐசி ஊழியர் சங்க தலைவர் ஹரிச்சந்திரன், சிஐடியு தென்காசி மாவட்டச் செய லாளர் மணிகண்டன் ஆகி யோர் பேசினர். எம்டிஆர்டி முகவரும் இணைச் செய லாளருமான லடிஸ்லாஸ் நன்றி கூறினார். கூட்டத்தில், கூடுதல் செயலாளர் சி.கே.குமார், துணைச் செயலாளர்கள் கண்ணன், நிஷாமுருகன், பொன்னுத்தாய், கபில் செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலம்மாள், லோக நாயகி, வீராச்சாமி, சுப்பிர மணியன் மற்றும் திரளான முகவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட முகவர்களிடம் நாகர்கோவில் சிஐடியு மாநில மாநாட்டு நிதியை செயலாளர் கணேசன் வசூல் செய்தார். வசூலான நிதி ரூ.1,320-ஐ, சிஐடியு மாவட்டச் செயலாளர் மணிகண்டனிடம் தலைவர் மூக்கையா, பொருளாளர் பெருமாள்சாமி ஆகியோர் வழங்கினர்.