tamilnadu

img

மாமல்லபுரத்தில் கொடியேற்றதுடன் துவங்கியது

மாமல்லபுரம், ஏப்.11- அகில இந்திய எல்ஐசி முக வர்கள் சங்கத்தின் (லிகாய்) 4 வது தமிழ் மாநில மாநாடு மாமல்லபுரத்  தில் செவ்வாயன்று (ஏப்.11) கொடி யேற்றத்துடன் உற்சாகமாக துவங்கியது. தோழர் எ.ஜெயராமன் நகரில்  தோழர் எஸ்.சுத்தானந்தம் நினை வரங்கத்தில் இம் மாநாடு நடை பெறுகிறது. சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.பூவலிங்கம் தலை மை வகித்தார்.  வரவேற்புக் குழு தலைவர் எம்.இராஜேந்திரன் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். வரவேற்புக் குழு செய லாளர் டி.கே.வெங்கடேசன் வர வேற்றுப்பேசினார்.  அஞ்சலி தீர்மானத்தை மாநிலச் செயலாளர் என்.ராஜா வாசித்தார். மாநில பொதுச் செயலாளர்  எஸ்.ஏ. கலாம் செயலாளர் அறிக்கையும், மாநிலப் பொருளாளர் கே.தா மோதரன்  வரவு, செலவு அறிக்கை யும் சமர்ப்பித்தனர். மாநாட்டை வாழ்த்தி, ஏஐடியுசி தேசிய செய லாளர் வஹிதா நிஜாம், எல்ஐசி தேசிய களப்பணியாளர்கள் கூட்ட மைப்பின் சென்னை கோட்ட உதவி செயலாளர் எஸ்.ஆர்.வீரக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.  புதன்கிழமை தொடர்ந்து மாநாடு  நடைபெறவுள்ளது. இம்மாநாட் டில் பொதுத் துறையான எல்ஐசி யை பாதுகாத்திடவும் முகவர் களின் வாழ்வாதாரத்தை பாது காத்திடவும் பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்படவுள்ளது.சங்கத்தின் புதிய நிர்வாகிகளும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.