tamilnadu

ஜோதி ஸ்ரீ துர்கா மரணத்திற்கு முன் எழுதிய கடிதம்

மதுரை:
மதுரை ரிசர்வ்லைனை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா ஞாயிறன்று நீட் தேர்வு எழுதவிருந்த நிலையில்சனிக்கிழமை அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது குடும்பத்தினருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் சில வரிகள், “நீங்கள் என் மேல் ரொம்ப எக்ஸ்படசேன்ஸ் வைச்சிருந்தீங்க. ஐ எம்சாரி. ஒரு வேளை எனக்கு சீட் காலேஜ்ல கிடைக்கலேன்னா, ஆல் யுவர் ஹார்டு ஒர்க்ஸ் பார் மீ வில் கோஇன் வெயின். ஐ யேம் சாரி, ஐ யேம் டயர்டு” எனக்குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது, ஆச்சி, தாத்தா, சித்தி, மாமா, அம்மு, செல்வி சித்தி ஆகியோருக்கும் பாய் சொல்லியுள்ளார்.