புதுதில்லி, ஜுன் 20- ராணுவவீரர்களை ஒப்பந்த முறையில் பணிக்கமர்த்தும் அக்னி பாத் திட்டத்துக்கு எதிராக தில்லி ஜன்பாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் மற்றும் இளைஞர்கள் தில்லி காவல் துறையால் தாக்கப்பட்டனர். அவர்க ளை தாக்கியதுடன் இழுத்துச் சென்று போலீஸ் வேனில் ஏற்றிய சம்பவத்துக்கு இடதுசாரி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். மாநிலங்களவை தலை வர்க்கும்,ஒன்றிய உள்துறை அமைச்ச ருக்கும், எம்.பி.க்கள் எளமரம் கரீம், ஜான் பிரிட்டாஸ், வி.சிவதாசன், ஏ.எம். ஆரிப் ஆகியோர் கடிதம் எழுதியுள்ள னர். மக்கள் பிரதிநிதியிடம் சாதாரண மரி யாதையைக்கூட காட்டாத தில்லி காவல்துறையின் நடவடிக்கை மிக மோசமானது என கடிதத்தில் குறிப் பிட்டுள்ளனர். ரஹீமும் சக இளைஞர்களும் தாக்கப்பட்டு, போலீஸ் வேனில் இழுத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்களுடன் நகரத்தை மணிக் கணக்கில் சுற்றி வந்தனர். அதன் பிறகு, அவர் ஹரியானா எல்லையில் உள்ள துவாரகா செக்டார் 23 காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டார். போதிய காரணங்கள் இல்லா விட்டாலும் கடுமையான சட்டப்பிரிவு களின் கீழ் காவலில் வைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று (ஜுன் 19) காலை ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் வரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மிகவும் அமைதியாக பேரணி நடைபெற்றது. எந்தவித ஆத்திரமூட்டலும் இல்லாம லேயே காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். தான் ஒரு எம்.பி., என்று கூறியபோதிலும், ரஹீமை அடித்து, உடைகளைக் களைந்து, காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
பேரணிக்கு தலைமை வகித்தவர்க ளில் ஒருவரான இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் மயூக் விஸ்வாஸ் உள்ளிட்டோருக்கும் இதே அனுபவம் கிடைத்தது. போராட் டத்திற்கு தலைமை தாங்கிய ஆய்ஷா கோஷ் உள்ளிட்ட பெண் ஊழியர்கள் மீதும் இதே அணுகுமுறை மேற் கொள்ளப்பட்டது. ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் கொடூரமான அடக்கு முறையின் ஒரு பகுதி இது. மாநிலங்க ளவைத் தலைவரும், ஒன்றிய உள்துறை அமைச்சகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், இரவு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட ஏ.ஏ.ரஹீம் திங்களன்று (ஜுன் 20) அதிகாலை விடுவிக்கப்பட்டார். முன்னதாக பெண் ஊழியர்களும் விடுவிக்கப்பட்டனர்.