ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீனா சென்றுள்ளார். அமெரிக்க ஏகாதிபத்தியம், ரஷ்யாவைக் குறிவைத்து, உக்ரைன் விவகாரத்தை தீவிரப்படுத்தி போர்வெறியைக் கிளப்பி வரும் சூழலில், புடினின் சீனப்பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமது சீனப் பயணத்தின் அரசியல் முக்கியத்துவம் பற்றி புடின் கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரை இங்கு தரப்படுகிறது.
சீனப்பயணத்தை நான் மேற்கொள்ளும் இந்த வேளை யில், சீன மக்கள் மற்றும் உலக மக்களோடு நேரடியாக இந்தக் கட்டுரை மூலம் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரஷ்யாவும் சீனாவும் பல நூறாண்டுகள் பாரம்பரியம் உள்ள நட்பு மற்றும் நம்பிக்கைகளைக் கொண்ட அண்டை நாடுகளா கும். ஒரு முழுமையான, அரசியல், புவி முக்கியத்துவம் வாய்ந்த நீண்டகால ஒருங்கிணைப்பைக் கொண்ட ஒத்துழைப்பை நாம் விரும்புகிறோம். இது ஒரு புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்துள் ளது. இதுவரை இல்லாத அளவிற்கு, வருங்காலத்திற்கான திறமை, பொறுப்பு மற்றும் விழைவுகளுக்கான ஒரு முன் மாதிரி யாக நமது உறவு உருவாகியுள்ளது. சீனப் பழமொழி சொல்வது போன்று “வசந்த காலத்தில் நல்ல துவக்கம் கிடைப்பதில்தான் ஆண்டின் ஒட்டுமொத்த வேலையும் நடக்கும்”. வர்த்தக ரீதியான உறவை மேம்படுத்துவது நிச்சய மாக சிறப்புக் கவனத்தைப் பெறும். ரஷ்யா- சீனாவில் போதுமான அளவு நிதி, தொழில்துறை, தொழில்நுட்பம் மற்றும் மனித வளம் ஆகியவை உள்ளன. இவற்றை வைத்து நீண்டகால மேம்பாட்டு அம்சங்களை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். இணைந்து செயல்பட்டால், நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும். நமது குடிமக்களின் நலன்களை மேம்படுத்த முடியும். போட்டிகளை எதிர்கொள்ள நமது தயாரிப்பை பலப்படுத்திக் கொள்ளலாம். இன்றைய ஆபத்துகள் மற்றும் சவால்களுக்கு எதிராக இணைந்து நிற்க முடியும்.
வர்த்தகத்தில் சாதனை
2021 ஆம் ஆண்டின் இறுதியில் இருதரப்பு வர்த்தகம் 140 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டி சாதனை படைத்தது. 200 பில்லியன் டாலர் வர்த்தகம் என்ற இலக்கை நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். முதலீடு, உற்பத்தி, தொழில் மற்றும் விவசாயத்துறைகளில் முக்கியமான சில முன்முயற்சி கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தேசிய நாணயங்கள் தொடர்பான பிரச்சனைகளில் தன்னிச் சையாக மேற்கொள்ளப்படும் தடைகளால் உருவாகும் எதிர் மறை விளைவுகளை சமாளிக்க சில ஏற்பாடுகளைச் செய்தி ருக்கிறோம். அந்நியச் செலாவணி தொடர்பாக 2019 ஆம் ஆண்டில் ரஷ்ய அரசுக்கும், சீன அரசுக்கும் இடையில் ஒரு உடன்பாடு கையெழுத்தானது. அது இந்தப் பிரச்சனையில் ஒரு முக்கியமான சாதனையாகும். இருதரப்புக்கும் பலன் தரும் வகையில் எரிபொருள்துறை யில் கூட்டு உருவாக்கப்படுகிறது. நீண்டகால அடிப்படையில் சீனாவுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்குவதோடு, பெரிய அளவிலான கூட்டுத் திட்டங்களை செயல்படுத்தத் திட்டமிட்டுள் ளோம்.
சீனாவின் அணுமின் உற்பத்தி நிலையங்களில் புதிதாக நான்கு மின் உற்பத்திப் பிரிவுகளை ரோசாடோம் அரசுக்கழகம் கடந்த ஆண்டில் உருவாக்கியது இந்த கூட்டுத்திட்டங்களில் ஒன்றா கும். இவையெல்லாம் எரிபொருள் துறையில் சீனா மற்றும் ஒட்டு மொத்த ஆசியப்பகுதிக்கான பாதுகாப்பை பலப்படுத்துகிறது. தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், விண்வெளிப்பயணம் ஆகியவற்றில் கூட்டாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய தென்படுகின்றன. தேசிய விண்வெளிப் பயண கட்டமைப்பு மற்றும் நிலவை ஆய்வு செய்யும் மையத்திட்டம் ஆகியவையும் இதில் அடங்கும். 2020-2021ல் இந்த அம்சங்களில் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்த கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகளைச் சீனாவில் தயாரிக்க உதவியதற்கும், எங்கள் நாட்டுக்கு குறித்த நேரத்தில் மருத்துவ பாதுகாப்பு சாதனங்களை வழங்கியதற்கும் சீன நண்பர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த ஒத்துழைப்பு வளர்ந்து, பலப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
எல்லைப்பகுதியில் வளர்ச்சிக்கான கூட்டு
ரஷ்யாவின் மிக முக்கியமான நோக்கங்களில், சைபீரியா மற்றும் ரஷ்யாவின் கிழக்குக் கோடியில் உள்ள பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதும் ஒன்றாகும். இவை சீனாவின் மிக அருகில் உள்ள பகுதிகளாகும். இரு தரப்பு ஒத்துழைப்பை நாங்கள் ஏற்படுத்த விரும்புகிறோம். இதனால் சைபீரியாவின் குறுக்கே உள்ள ரயில் பாதை உள்ளிட்டவை நவீனமயமாக்கப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டுக்குள், இந்தப் பாதைகளில் உள்ள சரக்குப் போக்குவரத்து ஒன்றரை மடங்கு அதி கரிக்கும். பயணத்திற்கான நேரம் பெரிய அளவில் குறையும். ரஷ்யாவின் கிழக்குக் கோடியில் உள்ள துறைமுகக் கட்டமைப்பு கள் வளர்ச்சியடைந்துள்ளன. இவையெல்லாம் ரஷ்யா மற்றும் சீனப் பொருளாதாரங்கள் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்வதில் அடையும் முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. உள்ளூர் மற்றும் எல்லை தாண்டிய ஒத்துழைப்பில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது முக்கியமானதாக உள்ளது. இரு நாடு களின் மக்களின் கவனத்தையும் இது ஈர்த்துள்ளது. ஆயிரக்க ணக்கான ஆண்டுகளாக நீண்ட பாரம்பரியம் கொண்ட பண் பாட்டைக் கொண்ட நாடுகளாக ரஷ்யாவும், சீனாவும் உள்ளன. ரஷ்யா மற்றும் சீனாவின் பண்பாடுகள் பற்றி இரு நாடுகளிலும், பிற நாடுகளிலும் ஆர்வம் அதிகமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை, இரு தரப்பு கூட்டு நிகழ்ச்சிகள் மற்றும் எங்கள் குடிமக்களுக்கு இடையி லான நேரடித் தொடர்புகள் ஆகியவை பெருந்தொற்று காரணமா கக் குறைந்துள்ளன. நிலைமை அனுமதிக்கும்போது இவை சரியாகி விடும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. 2022 மற்றும் 2023 ஆண்டுகளை “விளையாட்டுப் பகிர்வு ஆண்டுகளாக” அனுசரிக்க நானும், ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் ஒப்புக் கொண்டுள்ளோம்.
சர்வதேச உறவுகளில் ஜனநாயகம்
சவால்கள் நிறைந்த சர்வதேச சூழலில் நிலைத்தன்மையைக் கொண்டு வருவதில் எங்கள் நாடுகள் பங்கு வகிக்கின்றன. சர்வதேச உறவுகளில் சமமான, அனைவரையும் இணைக்கும் வகையில் பெரும் அளவிலான ஜனநாயகத்தை முன்னி றுத்துகிறோம். உலக விஷயங்களில் ஐக்கிய நாடுகள் சபை ஒரு ஒருங்கிணைக்கும் பாத்திரத்தைச் செய்வதைப் பலப்படுத்த நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை முன்னிறுத்தி, சர்வதேச சட்ட அமைப்பு கரைந்து போகாமல் பார்த்துக் கொள்கிறோம். பிரிக்ஸ், ரஷ்யா-இந்தியா-சீனா கட்டமைப்பு, ஷாங்காய் ஒத்து ழைப்புக் கழகம் ஆகிய அமைப்புகளின் மூலம் விரிவடைந்த நிகழ்ச்சி நிரலை எடுத்துச் செல்ல ரஷ்யாவும், சீனாவும் தீவிரமாக ஒத்து ழைக்கின்றன. ஜி-20 அமைப்பிற்குள், பெருந்தொற்றுக்கு எதிரான போராக இருக்கட்டும் அல்லது சுற்றுச்சூழல் குறித்த திட்டமாக இருக்கட்டும், எங்கள் பரிந்துரைகளைச் சொல்லும் போது பிற நாடுகள் சார்ந்த அம்சங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் இரு நாடுகள் ஒன்றுபட்டு நின்றதால், ரோம் நகரில் நடந்த 2021 ஜி-20 மாநாட்டில், பொருளாதார வளர்ச்சி, தடுப்பூசிகளையும் தடுப்பூசி சான்றிதழ்க ளையும் அங்கீகரிப்பது, எரிபொருள் மாற்றத்தை மேம்படுத்துவது மற்றும் மின்னணுத்துறையில் உள்ள ஆபத்துகளைக் குறைப்பது ஆகிய அம்சங்களில் சர்வதேச ஒத்துழைப்பை பெறு வதில் வெற்றி காண முடிந்தது. சர்வதேச வர்த்தக விவகாரங்களில் ஒன்றிணைந்த நிலைப் பாடுகள் உள்ளன. உலக வர்த்தக மையத்தின் விதிகளின் அடிப்படை யில் வெளிப்படையான, தெளிவான மற்றும் பாரபட்சம் இல்லாத பன்முகத்தன்மை கொண்ட வர்த்தக அமைப்பை நாங்கள் வலி யுறுத்துகிறோம். உலக அளவிலான விநியோகக் கட்டமைப்பை மீண்டும் கொண்டு வருவதை நாங்கள் ஆதரிக்கிறோம். மார்ச் 2020-இல் தடைகள், அரசியல் மற்றும் நிர்வாகக் குறுக்கீடுகள் இல்லாத “பசுமை வர்த்தகப் பாதைகளை” ரஷ்யா முன்மொழிந் தது. இதை நடைமுறைப்படுத்துவது பயன்தரும். பெருந்தொற் றின் பாதிப்புகளில் இருந்து வெளிவர உதவும்.
அரசியல் ஆக்காதீர்!
உலக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பெய்ஜிங் குளிர் கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இருக்கப் போகின்றன. ரஷ்யாவும், சீனாவும் விளையாட்டுகளில் முன்னணி நாடுகளாக உள்ளன. விளையாட்டுப் பாரம்பரியத்திற்கு இரு நாடுகளும் பெயர் பெற்ற வையாகும். பெரிய அளவிலான சர்வதேசப் போட்டிகளை இரு நாடுகளும் நடத்தியுள்ளன. ஆகஸ்டு 2008இல் பெய்ஜிங்கில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் துவக்க நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றதை மகிழ்வுடன் நினைவு கூர்கி றேன். எப்படிப்பட்ட வசதிகளை சீன நண்பர்கள் ஏற்படுத்திக் கொடுத் தார்கள் என்பதை ரஷ்யாவில் இருந்து சென்று விளையாட்டு வீரர்க ளும், விருந்தினர்களும் நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்திருப் பார்கள். எங்கள் தரப்பில், 2014 ஆம் ஆண்டில் சோச்சியில் நடை பெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் துவக்க நிகழ்ச்சி யில் ஜி ஜின்பிங் பங்கேற்றதை களிப்புடன் நினைவு கூர்கிறோம். துரதிருஷ்டவசமாக, தங்கள் சுயநலத்திற்காக சில நாடுகள் விளையாட்டை அரசியல்படுத்த நினைக்கின்றன. இது அடிப்ப டையிலேயே தவறானதாகும். ஒலிம்பிக் சாசனத்தின் கோட்பாடு களுக்கு மாறாக உள்ளது. மக்களை ஒன்றுபடுத்தும் பெரும் சக்தி விளையாட்டுகளுக்கு உண்டு. வெற்றிக் களிப்பையும், நாடுக ளின் பெருமையையும் அவை பறைசாற்றும். நேர்மையான, நியாயமான மற்றும் எந்தவித சஞ்சலமும் இன்றி நாடுகள் இதில் பங்கேற்க முடியும். சர்வதேச ஒலிம்பிக் இயக்கத்தில் பங்கேற்கும் பெரும்பாலான நாடுகள் இந்த அம்சங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. குளிர்கால ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிக ளுக்கு எங்கள் சீன நண்பர்கள் அபாரமான உழைப்பைச்செலுத்தி யிருக்கிறார்கள். இந்த உலக விளையாட்டுத் திருவிழாவை ஒரு உயர்ந்த மட்டத்தில் சீனா நடத்தித் தருவதில் அவர்களுக்கு விரிவான அனுபவம் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நன்றி : சின்குவா இணையதளம்,
தமிழில் : கணேஷ்