tamilnadu

img

விவசாயிகளின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவோம்!

பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கும், விளை நிலங்களுக்கும், கிரா மங்களின் முன்னேற்றத்திற் கும் ஏதுமில்லை. அவர்களது தேர்தல் அறிக்கை முதலாளி வர்க்கத்திற்கானது; கார்ப்பரேட் நிறுவனங்களுக் கானது. மற்ற நேரங்களில் நமக்காக உழைப்பதாக பாஜகவினர் ஏமாற்று கின்றனர். பாஜகவினர் மக்க ளையும், தேர்தல் ஆணை யத்தையும் மதிப்பதில்லை. தங்களது தேர்தல் பணிக ளையும், மக்களை ஏமாற்றும்  வேலைகளையும் ஏஜென்சி களை வைத்து செய்து வருகின்றனர்.  எனவே, விவசாயிகளின் உண்மை முகத்தை நாம் இப்போது வெளிப்படுத்த வேண்டும்.  புதிய அரசு அமைந்தால், தற்போது கொடுத்துள்ள வாக்குறுதி களை நிறைவேற்ற வேண் டும். எம்எஸ்பி எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலை யை சட்டப்பூர்வமாக மாற்று வதன் மூலம், விளை பொ ருட்களின் விலை சீராகும்; விவசாயிகள் நல்ல பயன்  பெறுவார்கள். மத ரீதியாக பார்த்தால், ராமர் கோவிலு க்கு அனைவரும் செல்வதை வைத்துக் கொண்டு, பாஜக விற்கு அனைவரும் ஆதரவு என்றில்லை. ஒரு குறிப்பிட்ட கட்சிக்கானது கோவில் அல்ல. கோவில்கள் அனைவருக்கும் பொதுவா னது. ராமர் சிலையை பாஜக அலுவலகத்தில் வைத்துக் கொண்டால், அது கோவி லாகிவிடாது. ராமர் சிலை  பாஜக அலுவலகத்தில் ஸ்தாபிதம் செய்யப்பட வில்லை. ராமர் கோவிலுக்கு யாரும் செல்லலாம்; யாரும் வழிபடலாம். ஆனால், அவர்கள் பாஜக ஆதரவாளர்கள் இல்லை என்பதை மக்கள் உணர்த்து வார்கள். தென்னிந்தியா விலும் ஏராளமான கோ வில்கள் உள்ளன; ஏராளமா னவர்கள் வழிபடுகின்றனர். அதற்காக அவர்கள் அனை வரும் பாஜகவினராகிவிட மாட்டார்கள். கோவில் என்பது நமது சொத்து. ஈரோட்டில் ஞாயிறன்று நடைபெற்ற மதிமுக தலைவர் அ.கணேச மூர்த்தி புகழஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கூறியது