சென்னை, பிப். 18 - சிந்தனைசிற்பி சிங்காரவேலரின் லட்சியத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்துச் செல்லும் என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் கூறினார். சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் 163ஆவது பிறந்த நாள் விழா வெள்ளியன்று (பிப்.18) கொண்டாடப்பட்டது. இதனை யொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது உருவச்சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட் டிருந்த உருவப் படத்திற்கு ஜி.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர். 1923ஆம் ஆண்டு முதன் முதலில் செங்கொடியேற்றி மேதினத்தை கொண்டாடிய மாமனிதர் அவர். சென்னை நகர்மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டபோது முதன் முதலில் தமிழில் உறுதி மொழி யேற்றவர். மதிய உணவு திட்டத்தை தொடரச் செய்தவர். அன்றைக்கு இருந்த 57 அரசுப் பள்ளிகளை 74ஆக உயர்த்த பாடுபட்டவர். வீடு தேடி மருத்துவம் வழங்கும் திட்டத்தை கொண்டு வரச் செய்தவர்” என்றார். “சாதி மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க போராடியதோடு, சமூக சீர்திருத்த இயக்கத்தை உறுதியாக நடத்தியவர். மத ரீதியாக மக்களை பிளவுபடுத்த ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட சங்பரிவார கும்பல் முயற் சிக்கின்றன.
ஆகவே, இன்றைய காலக்கட்டத்தில் சிங்காரவேலர் கூடுத லாக தேவைப்படுகிறார். சமூக சீர்திருத்தம் இயக்கத்திற்காக, மத நல்லிணக்கத்திற்காக, மதவெறிக்கு எதிராக போராடுவதற்காக, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க இன்றும் சிங்காரவேலர் தேவைப்படுகிறார். அவரின் லட்சியத்தை மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுத்துச் செல்லும்” என்றும் அவர் கூறினார். ‘பிரிவினைவாதத்தை தூண்டும் கட்சியை ஒரு நிமிடம் கூட ஆட்சியில் தொடர அனுமதிக்கக்கூடாது’ என்று பிரதமர் பேசியிருப்பது குறித்து செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அப்படி யென்றால், முதலில் ஆட்சியை விட்டு வெளியேற வேண்டியது பிரதமர் மோடிதான். அவர்தான் பிரிவினை வாதத்தை தூண்டி விடுகிறார். ஹரித்து வாரில் சாமியார்கள் ஒன்றுகூடி, இந்துக்கள் ஆயுதங்களை ஏந்த வேண்டும். இஸ்லாமியர்களை கொல்ல வேண்டும் என்று பேசினர். அதை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டிக்க வில்லை. ஆகவே, பிரிவினைவா தத்தை வளர்க்கும் மோடிதான் முதலில் வெளியேற வேண்டும்” என்றார். இந்நிகழ்வின்போது கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலா ளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி, பகுதிச் செயலாளர் எம்.ஜலாலுதீன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.