இந்தியாவில் 16 கோடி குழந்தைகள் உள்ள னர். இவர்களில் ஆறு வயதிற்குட் பட்ட குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்குவது, அவர்களை அறிவுக்கூர்மை யுள்ளவர்களாக தயார்படுத்துவது, குழந்தை களுக்கு தேவையான கல்வியை கற்றுக்கொடுத்து அவர்களை தொடக்கப்பள்ளிகளுக்கு அனுப்பு வது என்ற தலையாய பணியைச் அங்கன்வாடி ஊழியர்களும் உதவியாளர்களும் செய்து வருகிறார்கள். நாடு முழுவதும் சுமார் 26 லட்சம் அங்கன்வாடி ஊழியர்கள்- உதவியாளர்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். ஐசிடிஎஸ்-பிரிவில் பணியாற்றும் உதவியா ளர்கள் அதிகளவில் சுரண்டப்படுகின்றனர். இவர்கள் தான் மொத்த உழைப்பாளர்களில் சரிபாதியாக உள்ளனர். சமூகத்தில் நிலவுடைமை மனப்பாங்கில் பெண்கள் நடத்தப்படுவது போல் உதவியாளர்கள் நடத்தப்படுகின்றனர்.
இந்தியாவில் ஆந்திரா, குஜராத், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், கர்நாடகம், கேரளம், மகா ராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா மாநிலங்க ளில் அங்கன்வாடி ஊழியர்கள் சிஐடியு தலை மையிலான அமைப்பில் கணிசமாக உள்ளனர். குறிப்பாக குஜராத் மாநிலத்தில் அமைப்பு பரவ லாக உள்ளது. இங்கு உறுப்பினர் எண்ணிக்கை யும் அதிகரித்துள்ளது. அசாம், பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க் கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் நமது கோரிக்கைகளுக்காக பிரம்மாண்டமான போராட்டங்கள் நடத்தி சில கோரிக்கைகளில் வெற்றியை ஈட்டியுள்ளோம்.
மதுரையில் இன்று மாநாடு துவக்கம்
ட்டுள்ள புதிய தொழிலாளர் தொகுப்பில் அங் கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் தொழி லாளர்களாக அங்கீகரிக்கப்படவில்லை. பொதுவாக முறைசாராத் தொழிலாளர்களாகவே பார்க்கின்றனர். சில மாநில அரசுகள் மட்டும் சமூக பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்துகின்றன. எந்தவொரு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் மூலமோ அல்லது பணிவரன்முறைகளின்படியோ அங்கீகரிக்கப்படவில்லை. இந்தப் பின்னணியில்தான் மதுரையில் அகில இந்திய அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சம்மேளனத்தின் 10-ஆவது மாநாடு மதுரையில் டிசம்பர் 6-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 650 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு 60 சதவீதம் நிதியளிக்கிறது. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2021-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் குழந்தைக ளுக்கான ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு நலன்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதவீதத்தை குறைத்துள்ளது. பசிக்குறியீட்டிலும் இந்தியா 107-ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய சூழலில் ஊட்டச்சத்து குறை பாட்டால் (ஆறு மாதத்திற்கு உட்பட்டவர்கள்) மாதம் ஒன்றிற்கு சுமார் 20,500 குழந்தைகள் உயிரி ழக்கின்றனர் என்ற வேதனையான செய்தியை யும் நாம் பகிர்ந்துகொள்வது அவசியமாகிறது.
பக்தியும்-பஜனையும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குமா?
உத்தரகண்ட் மாநில அமைச்சர், அங்கன் வாடி ஊழியர்கள் அருகிலுள்ள சிவன் கோவில் களில் ‘பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ’ (பெண் குழந்தையைக் காப்பாற்றுங்கள், அவர்களுக்கு கல்வி கற்பியுங்கள்) எனக் கூறுகிறார். பாஜக அரசுகள் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க போதிய நிதியை ஒதுக்காமல் கடவுளின் பெயரில் பஜனைகளை பாடுங்கள் என புதுப்புது உத்தரவு களை போட்டுள்ளது வேதனையாக உள்ளது. பிரதமர் மோடி, தனது ‘மான் கி பாத்’ நிகழ்வில், 75 வது சுதந்திர தினத்திற்குப் பிறகு ஒலிபரப்பப் பட்ட உரையில், மத்தியப் பிரதேச அரசின் கண்டு பிடிப்பைப் பாராட்டியுள்ளார். அதாவது குழந்தைக ளின் ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைக்க பக்திபாடல்கள் பாடுவது நல்லது என்றார். ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைக்க பக்திப் பாடல்கள் பாடுமாறு ஆட்சியாளர்கள் கூறும் நிலையில் தில்லி, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதே சம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், அங்கன்வாடி ஊழியர்கள் -உதவியாளர்கள் கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களாக ஊதி யத்தைப் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் வியாபாரிகளா?
மத்தியப்பிரதேச பாஜக அரசு அங்கன்வாடி யில் ‘போவன் மாட்கா’ திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு அங்கன்வாடி ஊழியரும் மையங்களில் ஐந்து ‘மட்காஸ்’ (மண் பானைகள்) வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் கிராம மக்களிடமிருந்து ஐந்து குவிண்டால் உணவு தானியங்களைச் சேகரிக்க வேண்டும். இதில், மூன்று குவிண்டால் உணவு தானியங்களை விற்க வேண்டும். கிடைக்கும் பணத்துடன் நெய், சர்க்கரை வாங்கி இனிப்புப் பொருள் தயாரித்து வழங்க வேண்டும் என உத்தர விட்டுள்ளது. அது மட்டுமல்ல, அங்கன்வாடி தொழிலாளர் கள், உதவியாளர்கள் மாவட்டத்தில் பஜனை யில் (சிவ் மஹாபுராண் கதா) கலந்து கொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளது.
பஞ்சாப் போராட்டம்
கோரிக்கைகளுக்காக போராடிய அங்கன் வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆயிரம் பேரை பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு பணிநீக்கம் செய்தது. மீண்டும் அவர்களை பணியில் சேர்க்க வலியுறுத்தி சங்ரூரில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டம் பாஜகவின் தொழிலாளர் விரோதக்கொள்கையை ஆம்ஆத்மியும் கடைப் பிடிக்கிறது என்பதை நிரூபிப்பதாகவே இருந்தது. அமைதியாக பேரணி சென்றவர்கள் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் மூன்று மணி நேரம் சாலை மறியல் நடை பெற்றது. இறுதியில் குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் முதல்வர் வருகிற டிச.15அன்று தொழிற்சங்கப் பிரதிநிதிகளை சந்திக்க ஒப்புக் கொண்டுள்ளார். அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்களின் ஊதியத்தை இரட்டிப் பாக்குவோம் என்ற ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்குறுதி நகைச்சுவைக்கு உள்ளாகி உள்ளது.
தமிழகம்
தமிழகத்தைப் பொறுத்தவரை 49,499 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் 4,940 மையங்கள் மினி மையங்களாகும். மொத்தம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலா ளர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் 25 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் ஒரு ஊழியர், உதவியாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ரூ.450-க்கு விற்ற சிலிண்டர் ரூ.1,200-க்கு விற்கிறது. ஆனால் அரசு ரூ.403 மட்டுமே வழங்கு கிறது. எஞ்சியுள்ள தொகையை அங்கன்வாடி ஊழியர்களே செலுத்துகின்றனர். ஒரு ஊழியர் மூன்று மையங்களை பாதுகாக்க வேண்டியிருப்ப தால் இந்த மையத்தில் உள்ள சிலிண்டருக்கான கூடுதல் செலவையும் ஏற்க வேண்டியுள்ளது. மொத்தத்தில் சிலிண்டருக்கு சம்பளத்தின் ஒரு பகுதியை செலவிடுகின்றனர். சிலிண்டருக்கான முழுத் தொகையையும் அரசே வழங்கவேண்டும். சில பகுதிகளில் வாடகைக் கட்டடங்களில் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வரு கின்றன. அரசோ வாடகைக் கட்டணமாக ரூ.750 முதல் ரூ.1,000 வரை தான் வழங்குகிறது. 25 குழந்தைகள் முதல் 40 குழந்தைகளை பரா மரிப்பதற்கு ரூ.1000-த்திற்கு யார் கட்டடம் தரு வார்கள்? இதற்கான கூடுதல் செலவையும் ஊழி யர்களே ஏற்கவேண்டியுள்ளது. அனைத்து கிரா மங்களிலும் சொந்தக் கட்டடம் கட்டித் தர வேண்டும். வாடகைக் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். ஊழியர்கள் குழந்தைகளைப் பராமரிப்பதை விட பதிவேடுகள் பராமரிப்பதிலேயே காலத்தை செலவிடுகின்றனர். குறைந்தது 20 பதிவேடு களை பராமரிக்கவேண்டியுள்ளது. மேலும், ஒன்றிய அரசின் தரவு தளம், மாநில அரசின் தரவு தளம், மாவட்ட ஆட்சியர்களின் தரவு தளம் ஆகியவற்றில் அன்றாடம் குழந்தைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது.
போஸ்கான் தரவுதளம்
ஒன்றிய அரசின் போஸ்கான் தரவுதளத்தை அந்தந்த பிராந்திய மொழிகளில் பதிவேற்றம் செய்யும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். ஒரு தகவலை தவறாக பதிவேற்றம் செய்தால் அதை திருத்துவதற்கான வசதியை அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். போஸ்கான் தரவுதளத்தில் பல்வேறு நலத்திட்ட விவரங்கள் உள்ளன. அதில் குழந்தையின் தந்தை அல்லது தாயின் செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போதுள்ள முறைப்படி ஒரு குழந்தை ஒரு நலத்திட்ட உதவியை பெறுவதற்கே வாய்ப்புள்ளது. அதே குழந்தை மற்றொரு நலத்திட்ட உதவியைப் பெற தந்தை யின் செல்போன் எண்ணையோ, தாயின் செல்போன் எண்ணையோ பதிவேற்றம் செய்தால் தரவுதளம் ஏற்க மறுக்கிறது. இதைத் தவிர்க்க வேறொரு நபரின் செல்போன் எண்ணை பதி வேற்றம் செய்யவேண்டியுள்ளது. இது எத்தகைய விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைத்தாலே அதிர்ச்சியாக உள்ளது. ஒன்றிய அரசு குழந்தைகளின் விவரங்க ளைப் பதிவேற்றம் செய்ய ஆதார் அட்டையை கட்டாயமாக்கி உள்ளது. ஆதார் அட்டை கட்டாய மில்லை என நீதிமன்ற தீர்ப்புகள் இருந்தாலும் ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது. இதை உடனடி யாகக் கைவிட வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியா ளர்களுக்கு தமிழக அரசும், கேரள அரசும் மட்டுமே போதுமான உதவிகளைச் செய்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிப்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் காலத்தில் தெரி வித்திருந்தார். இந்தக் கோரிக்கை தொடர்பாக சந்தித்துப் பேசியபோது, கால அவகாசம் தாருங்கள் எனக் கூறியிருக்கின்றனர். விரைவில் அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்க ளாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இந்தியாவில 57 லட்சத்து 72 ஆயிரத்து 472 குழந்தைகள் போஷாக்கின்மையால் எடை குறைவாகவும், உயரம் குறைவாகவும் உள்ளதாக யுனிசெப் தெரிவிக்கிறது. இந்தப் பின்னணியில் தான் ஊட்டச்சத்தின் முக்கியத்துவமும் அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சம்மேள னத்தின் 10-ஆவது அகில இந்திய மாநாடும் முக்கி யத்துவம் பெறுகிறது. யுனிசெப் அறிக்கை குழந் தைகளின் போஷாக்கின்மையை மட்டும் வெளிப் படுத்தவில்லை; தேசத்தின் போஷாக்கின்மையை யும் வெளிப்படுத்தியுள்ளது.