கோவை, ஜன.22- பிஎஸ்என்எல் தொலைதொடர்பு சேவை நிறுவனத்தின் அவசியத்தை எடுத்துரைக்கிற வகையில், காம்ரேட் டாக்கீஸ் உருவாக்கிய ஆவணப் படம் கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு தற்போது வரை 4ஜி சேவையை அனுமதி வழங்காமல் உள்ளது. ஆனால், தனியார் நிறுவ னங்களுக்கு 5ஜி சேவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு திட்டமிட்டு அரசு பொதுத்துறை நிறு வனமான பிஎஸ்என்எல் நிறுவ னத்தை ஒழித்துக்கட்ட நினைக்கிறது. அதேசமயம் அடித்தட்டு மக்களுக் கும், மலைவாழ் பகுதிகளில் தனி யார் நிறுவனங்கள் யாரும் சென்றி ராத பகுதிகளில் தன்னுடைய சேவை களை பிஎஸ்என்எல் தொடர்ந்து பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் எப்படிப் பட்ட சூழலில் கடுமையான உழைப்பி னால் வளர்ந்தது.
மக்களுக்கும், அர சுக்கும் லாபகரமான சேவையை பிர தான நோக்கமாக கொண்டது என் பதை எடுத்துக்காட்டும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மகத்து வத்தை முன்வைத்து ஆவணப்படத்தை எடுத்துள்ளது காம்ரேட் டாக்கீஸ். இந்த ஆவணப்பட வெளியீட்டு விழா கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாபு ராதாகிருஷ் ணன் தலைமை வகித்தார். காம்ரேட் டாக்கீஸ் ஒருங்கிணைப்பாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான இரா.சிந்தன் வர வேற்புரையாற்றினார். திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் ஆவ ணப்படத்தினை வெளியிட்டார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மண்டல துணைச்செயலாளர் செல் லப்பா, ஆவணப்பட இயக்குநர் காமாட்சி ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிஎஸ்என்எஸ் ஊழியர் சங்க கோவை மாவட்ட செயலாளர் மகேஷ்வரன் நன்றி கூறினார்.