உலக சுற்றுலா தினமாக ஒவ் வொரு ஆண்டும் செப்டம்பர் 27 கொண்டாடப்படுகிறது. கலாச்சார மரபுகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் சுற்றுலாவை பரந்த நோக்கில் அணுகிட உலக சுற்றுலா தினம் அழைக்கிறது.ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாவின் பங்களிப்பு முக்கியமானது. இதனைப் புரிந்து கொள்ள பொது மக்களையும் சுற்றுலாவில் பங்களிப்புச் செய்பவர்களையும் இந்த தினம் அழைக்கிறது. நிலைத்தகு நடைமுறைகள் மூலம் சுற்றுலாவை மேலும் வளர்த்தெடுக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறது. உலக நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை பேணுவதற்கும் அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்குமான மிக முக்கிய பங்கினை சுற்றுலா செய்து வருவதை அனைவரும் அறிவோம். கொரோனா முடக்கத்தில் இலங்கை போன்ற பல நாடுகள் சுற்றுலா வருமானத்தை இழந்து பெரும் பாதிப்பை சந்தித்ததை நேரடியாகக் கண்டோம். இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் சுற்றுலா வருமானத்தில் பொருளாதார மேம்பாடு பிணைக்கப்பட்டுள்ளதை அறிவோம். பல்வேறு காரணிகளால் சமூகத்தில் மன அழுத்தம் மேலோங்கி இருக்கிற காலகட்டத்தில் சுற்றுலா பெரும் நிவாரணியாக அமையும். 1980 இல் ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பு (UNITED NATIONS WORLD TOURISM ORGANISATION) இதனை உருவாக்கியது.
இதன் நோக்கம்: சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்புகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான். அரசு நிறுவனங்களும் சுற்றுலா அமைப்பு களும் இந்த தினத்தில் கண்காட்சிகள், கருத்தரங்குகள் போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துகின்றன. 2024 ஆண்டிற்கான உலக சுற்றுலா தின நோக்கம்: “சுற்றுலாவும் அமைதியும்” (Tourism and Peace). இந்த கரு, உலக அமைதியை முன்னெடுக்க சுற்றுலா வலியுறுத்தும் ஒரு முக்கியமான சாதனமாக செயல்பட முடியும் என்பதைக் குறிப்பதாகும். இது மக்கள், கலாச் சாரங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையி லான புரிந்துணர்வையும், நட்பையும் மேம்படுத்து வதற்கான சுற்றுலாவின் ஆதிக்கத்தை எடுத்துரைக்கிறது.
வேளாண் சுற்றுலா:
உலக சுற்றுலா தினத்தில் வேளாண் சுற்றுலாவை புரிந்து கொள்ளவும் வளர்த்தெடுக்கவும் உறுதி ஏற்போம். பல உலக நாடுகளில் வேளாண் சுற்றுலா முக்கியத்துவம் பெற்று பரவலாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் வேளாண் சுற்றுலாவை ஆழமாக புரிந்து கொண்டு விரிவு படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வேளாண் சுற்றுலா கிராமப்புறங்களில் விவசாயப் பண்ணைகளை பார்வையிடவும் விவசாய விழிப்புணர்வு பெறவும் வழிவகை செய்கிறது. இது மரபு சுற்றுலாவுடன் விவசாய அனுபவங்கள் பெற கிராமப்புற வாழ்வை புரிந்து கொள்ள பாலமாக அமைகிறது.
வேளாண் சுற்றுலாவின் நோக்கங்கள்:
விவசாய அனுபவங்களை மையமாகக் கொண்டு விவசாயக் கல்வி மற்றும் கிராமப்புற வாழ்க்கையுடன் நேரடி தொடர்பினை வழங்குவதும் சூழல் நட்பினை உருவாக்கு வதும் விவசாயிகளுக்கான கூடுதல் வரு மானத்தை தருவதும் இதன் நோக்கங் களாகும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சுற்றுலா. ஒரு கருவியாக பயன்படுவதை போலவே வேளாண் சுற்றுலா. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த வழிவகை செய்கிறது. புதிய அணுகு முறையில் விவசாயத்தில் ஈடுபட இளைஞர்களையும் வேளாண் சுற்றுலா ஈர்க்கும். மனித நேயத்திற்கு சுற்றுலா. சூழல் நேயத்திற்கு வேளாண் சுற்றுலா.
வேளாண் சுற்றுலாவை முன்னெடுக்க:
மாநில அரசு, வேளாண் சுற்றுலாவிற்கு தெளிவான கொள்கைகள் உருவாக்க வேண்டும். வேளாண் சுற்றுலாவை வேளாண் சார்ந்த தொழிலாக அங்கீகரிக்க வேண்டும். விவசாயத்திற்கான திட்டங்களில் வேளாண் சுற்றுலா இடம் பெற இது வழிவகை செய்யும். போக்குவரத்து, மின்சாரம், தண்ணீர் போன்ற சுற்றுலாவிற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தல் அவசியம். இதில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்பு களை ஒருங்கிணைப்பு செய்து ஒன்றுபட்ட செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மாநில அளவில் இதற்கான பிரச்சாரம் வேண்டும். விவசாயிகளிடம் ஆர்வத்தை உருவாக்கிடவும் தேவையான திறன்களை மேம்படுத்தவும் பயிற்சிகள் தேவை. வேளாண் சுற்றுலாவை மேற் கொள்வதற்கு தேவையான கடன் உதவிகள் மானியங்கள் இணைக்க வேண்டும்.வேளாண் சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் அரசின் ஆதரவு தேவை. முறையாக திட்டமிட்டு கண்காணித்து செயல்படுத்தினால் தமிழ்நாடு வேளாண் சுற்றுலாவில் தலைமை பாத்திரம் வகிக்க வகை செய்யும். உலக சுற்றுலா தினத்தில் வேளாண் சுற்றுலாவை முனைப்புடன் முன்னெடுக்க உறுதி ஏற்போம்.