tamilnadu

img

மக்களுக்கான மருந்தியல் சேவையை மேம்படுத்துவோம்!

மக்களுக்கான மருந்தியல் சேவையை மேம்படுத்துவோம்!

பண்பாட்டின் தலைநகரான தமிழகம், தாய்மொழி காக்க உயிர்த்தியாகம் செய்த தமிழகம், தேசம் காக்க முன்ன ணிப்படையாக களம் காணும் தமிழகம் - சிந்து சமவெளி நாகரிகம் முதல் பூம்புகார், ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி என கலாச்சார மும் வாழ்வியல் வரலாறும் கொண்ட தமிழ கத்தின் நிர்வாகப் பணியமைப்பு வரிசையில் சுகாதாரத் துறையும் ஒன்றாகத் திகழ்கிறது. மருத்துவத்தில் முதன்மை மாநிலம் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்க ளிலும் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் சுகாதா ரத் துறையில் முதன்மை மாநிலமாக தொடர்ந்து முன்னணியில் உள்ளது. பெரியம்மை ஒழிப்பு, தொழுநோய் முற்றிலும் ஒழித்தல், இளம் பிள்ளைவாத நோய்த் தடுப்பு மற்றும் கொரோ னா உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொண்ட விதத்தில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. கண்ணொளி காப்போம், காசநோய் ஒழிப்புத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், பாதம் காப்போம், நம்மைக் காக்கும் நாற்பத்தெட்டு போன்ற எண்ணற்ற திட்டங்கள் வாயிலாக மக்களின் சுகாதாரம் மேம்பட தமிழக அரசும் துறை ஊழி யர்களும் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டி ருக்கின்றனர். தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 320க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், 1857க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8700க்கும் மேற்பட்ட துணை சுகாதார மையங்கள் என்று விரிந்த மருத்துவக் கட்டமைப்பு செயல்படுகிறது. தினமும் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகளும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் அரசு மருத்துவ மனைகளை நாடி வந்து பலனடைந்து வரு கின்றனர். மருந்தாளுநர்களின்  முக்கியப் பங்கு அரசுத் துறையில் மருந்தாளுநர்களின் பங்கு திரைக்குப் பின்னால் இயங்கும் கலை ஞனைப் போன்று வெளிச்சத்திற்கு வராமல் உள்ளது. சுமார் 1200க்கும் மேற்பட்ட மருந்து கள், 700க்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சைப் பொருட்கள், 500க்கும் மேற்பட்ட மருத்துவ சாதனங்கள் மற்றும் தடுப்பூசி மருந்துகள் கையாளப்படுகின்றன. தாய்சேய் நலத்திட்டத்தில் 18க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகளை வீரியம் குறையாமல் குளிர்பதன சங்கிலி முறையில், உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலிருந்து பயனாளிக்கு கிடைக்கும் வரை உரிய வெப்பநிலையில் பாது காத்து வழங்கும் பணியில் மருந்தாளுநர்கள் நேரம் காலம் பார்க்காமல் செயல்படுகிறார்கள். கூடுதல் பணியிடங்கள் அவசியம் மருந்தியல் விதித்தொகுப்பின்படி 100 புறநோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுநர், 75 உள்நோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுநர் என்ற விகிதத்தில் பணியிடங்கள் உருவாக் கப்பட வேண்டும். தமிழகத்தில் ஒன்பது இலட் சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு குறைந்தபட்சம் 10,000 மருந்தாளுநர் பணியி டங்கள் தேவை. தற்போது 4500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளன. காலியிடங்களை  நிரப்ப வேண்டும் தற்போது 700க்கும் மேற்பட்ட மருந்தாளு நர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தமிழக முதலமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கடந்த காலங்களில் தடை களை உடைத்து பணியிடங்களை நிரப்பியது போன்று, தற்போது காலியாகவுள்ள பணியி டங்களை மக்கள் நலன் கருதி விரைந்து நிரப்புவது காலத்தின் தேவையாகும். மாவட்டக் கிடங்குகளுக்கு தலைமை மருந்தாளுநர் 46 சுகாதார மாவட்டங்களில் உள்ள மருந்துக் கிடங்குகளில் தலைமை மருந்தாளு நர் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும். தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருந்தாளுநர்களை மாற்றுப் பணியில் அனுப்புவதால், தொடர்புடைய நிலையங்கள் மருந்தாளுநர் இல்லாமலேயே செயல்படுகின்றன. உள்கட்டமைப்பு மேம்பாடு தேவை அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை உரிய வெப்பநிலையில் பராமரிப்பதற்கு போது மான இடவசதியும் குளிர்பதன வசதியும் இல்லை. 1948 மருந்தியல் சட்டப்பிரிவின்படி மருந்துகளை முறையாகப் பராமரிக்க போது மான இடவசதியோடு கட்டமைப்பு அமைக்க வேண்டும். பதவி உயர்வு தேக்கநிலை மருந்தாளுநர்களுக்கு பதவி உயர்வு 25 ஆண்டுகளைக் கடந்த பிறகே கிடைக்கிறது. கூடுதலான பதவி உயர்வு பணியிடங்கள் - மருந்தகக் கண்காணிப்பாளர், மருந்தியல் அலுவலர், துணை இயக்குநர் மருந்தியல் ஆகியவற்றை உருவாக்கித் தர வேண்டும். தனியார் மருந்தகக் கட்டுப்பாடு தனியார் மருந்தகங்கள், முழுநேரமும் மருந்தாளுநரைக் கொண்டே இயங்க வேண்டும் என்ற விதியை முறையாகக் கடைப்பிடிக்க மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும் அரசும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். “உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற்கூற்றே மருந்து” என்று வள்ளுவர் பெருந்தகை மருத்துவ முறையைக் குறித்துக் கூறுகிறார். அரசே மருந்து உற்பத்தி  செய்ய வேண்டும் மேலை நாடுகளில் அரசே மருந்துகளை உற்பத்தி செய்கிறது. அரசின் மருத்துவக் கட்டமைப்பிற்கும் முதல்வர் மருந்தகத்திற்கும் தேவையான மருந்துகளை அரசே உற்பத்தி செய்து குறைந்த விலையில் வழங்கினால், உலகளவில் தமிழகத்தின் மருந்தியல் துறை மேலும் சிறப்படையும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை அதிகரிக்கச் செய்யவும், மருந்தாளுநர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் முடியும்.