மதுரை, டிச.6- குழந்தைகளைக் காப்போம்... அங்கன்வாடிகளைக் காப்போம்.... மக்களைக் காப்போம்... தேசத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு அகில இந்திய அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சம்மேள னத்தின் அகில இந்திய 10 ஆவது மாநாடு மதுரையில் செவ்வாய்க் கிமை தொடங்கியது. மாநாட்டின் முதல் நிகழ்வாக, மதுரை தெப்பக்குளத்தில் அமைந் துள்ள சிஐடியு ஸ்தாபகத்தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி சிலைக்கு அகில இந்தியத் தலைவர்கள் மாலை யணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மாநாட்டு அரங்கில் சிஐடியு செங்கொடியை அகில இந்தி யத் தலைவர் டாக்டர் கே.ஹேமலதா ஏற்றினார். அகில இந்திய அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க தலைவர் உஷாராணி, அமைப் பின் கொடியை ஏற்றினார். பின்னர் தியாகிகளுக்கு பிரதிநிதிகள் அஞ் சலி செலுத்தினர்.
இந்தியா முழுவதும் இருந்து ஐந்து லட்சம் உறுப்பினர்கள் சார்பில் வந்துள்ள 650 பிரதிநிதிகளை வர வேற்று இந்திய தொழிற்சங்க மையத் தின் மதுரை மாநகர் மாவட்டச் செய லாளர் இரா.லெனின் வரவேற்றார். சிஐடியு அகில இந்தியப் பொதுச் செயலாளர் தபன்சென் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: அங்கன்வாடி ஊழியர் சங்கம் சிஐ டியு அமைப்பில் மிக முக்கியப் பங் காற்றுகிறது. அங்கன்வாடி மூலம் பல்வேறு பகுதிளைச் சேர்ந்த ஏழை-எளிய மக்கள் பயன்பெறுகின்றனர். 1 முதல் 6 வயது வரையுள்ள குழந் தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உண வளித்து, அவர்களை பாதுகாத்து, அவர்களின் அறிவை கூர்தீட்டி அடிப்படைக் கல்வியை கற்பித்து, தொடக்கக் கல்விக்கு அழைத்துச் செல்லும் மகத்தான பணியை அங் கன்வாடி ஊழியர்கள் செய்கின்ற னர். இதனால்தான் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் குறைந்துள் ளது. குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்துவதற்கு அங்கன்வாடி பணியாளர்கள் அடித்தளமாக செயல்படுகின்றனர். கருவுற்ற தாய் மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்கு வதிலும் அங்கன்வாடி பணியாளர் கள் பெரும் பங்காற்றுகின்றனர்.
அங்கன்வாடி பணியாளர்கள் ஒருவரின் வாழ்வை மட்டும் உயர்த்து வதில்லை; ஒட்டுமொத்த குழந்தை களின் வாழ்வையும் மேம்படுத்து கின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க ஊழியர்களின் சங்கத்தை நாம் மேலும் வலுவடைய செய்ய வேண்டும். ஒன்றிய பாஜக அரசு அனைத்துத் துறைகளையும் தனியார்மயமாக்கி, மக்களை கசக்கிப் பிழிகிறது. கார்ப்ப ரேட் மயத்தால் பொது மக்கள் பல வகைகளில் இன்னல்களைச் சந்திக் கின்றனர். பள்ளிகளிலும் அரசு தனி யார்மயத்தை புகுத்திக் கொண்டி ருக்கிறது. அங்கன்வாடி உட்பட ஒட்டு மொத்த நலத் திட்டங்களையும் தகர்ப் பதற்கு, ஒன்றிய அரசு மறைமுக மாகவும் நேரடியாகவும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 2022 பட்ஜெட்டில், ஐசிடிஎஸ் திட்டத் திற்கான நிதியை வெகுவாக குறைத்துள்ளது. இத்திட்டங்களை மீட்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். இதேபோன்று, மதிய உணவு திட்டத்தை ஒட்டு மொத்தமாக நீக்குவதற்கான வேலை களையும் ஒன்றிய அரசு செய்து கொண்டிருக்கிறது. இந்நடவடிக்கை கள் அனைத்தும் தனியார்மயத்துடன் தொடர்புடையவை.
பாஜக அரசின் சதித் திட்டங்கள் அனைத்தையும் முறியடித்து, அங் கன்வாடி உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை அனைத்து தரப்பு மக்க ளிடமும் கொண்டு செல்ல வேண்டும். சமூக ஊடகங்களால் இப்பிரச்சனை களுக்கு தீர்வு காண இயலாது. இதற் காக ஒன்றிய அரசிடம் நாம் போராட வேண்டும். பெருந்தொற்று காலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட திட்டப்பணியாளர்கள் ஆற்றிய பணி கள் மகத்தானவை. ஆனால் அந்த ஊழியர்களுக்கு ஒன்றிய பாஜக அரசு என்ன செய்தது? ஒன்றிய அரசு அங்கன்வாடி சங்கம்/திட்டத்தின் மீது மட்டும் தாக்குதல் நடத்தவில்லை. ஏழை மக்கள், அவர்களின் ஆரோக்கியம், விவசாயிகள், தொழிலாளர்கள், மின்சாரம், போக்குவரத்து உட்பட அனைத்து துறைகளையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. அங்கன்வாடி பணியையும், திட்டங்களையும் பாது காப்பதற்கு நீங்கள் நம்பிக்கையுடன் தீவிரமாக பணியாற்ற வேண்டும். நமது எதிரிகள் யார்; மக்களுக் காக பணியாற்றுபவர்கள் யார் என் பதை நாம் அடையாளம் கண்டு போராட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாடு டிச.9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டில் சிஐடியு தமிழ்நாடு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன், தேசியச் செயலாளர் ஆர்.கரு மலையான், மாநிலப் பொதுச் செய லாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு, அங்கன்வாடி அமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ரத்தின மாலா, பொதுச் செய லாளர் டெய்சி , சிஐடியு மதுரை மாவட் டத் தலைவர் இரா.தெய்வராஜ், புற நகர் மாவட்டத் தலைவர் கண்ணன். செயலாளர் கே.அரவிந்தன், லூர்து ரூபி, ஜி.கௌரி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.