tamilnadu

img

மாரீச மானின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்!

ஏப்ரல் 19 இந்திய நாடாளு மன்ற பொதுத் தேர்தல். இந்த  நாளுக்காக தான் நாம் இத் தனை நாள் காத்திருந்தோம்! ஜனநாயகத்தின் இறுதி எஜ மானர்கள் வாக்காளர்கள்தான் என்  பதை சர்வாதிகார பாசிச மதவாத  சக்திகளுக்கு சொல்ல வேண்டி யது ஜனநாயக சக்திகளின் கட மையல்லவா? இந்தியாவைப் பாதுகாக்க “இந்  தியா” கூட்டணிக் கட்சிகளுக்கு கட மையாற்ற களத்திற்கு வாருங்கள். இந்த சந்தர்ப்பத்தை தவற விட் டால், அடுத்து ஐந்தாண்டுகள் 1825  நாட்கள் காத்திருக்க வேண்டும். நாட்டையே பெருமுதலாளி களுக்கு கூறு போட்டு விற்றாகி விட்டது. மதச்சார்பின்மை சிறு பான்மையினருக்கு எதிரான வன் முறை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், விவசாயிகளின் தன்னெழுச்சியான போராட்டம். அதனால் சட்டம் - ஒழுங்கு பாதிக் கப்பட்டு சகோதர சகவாழ்வு பாதிக்  கப்பட்டது. மணிப்பூர் பற்றி எரிகிறது அணைக்க வேண்டிய இரட்டை எஞ்சின் ஆட்சியாளர்கள் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்று கின்றனர். ரோம் நகரம் பற்றி எரிந்தபோது  நீரோ மன்னன் பிடில் வாசித்தது,  இந்தியாவிலும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது; ஜனநாய கத்தின் மீது பற்று கொண்டவர்கள் கடமை ஆற்றுவதற்கான வேளை வந்துவிட்டது. தேர்தல் அதற்கு கீதம் இசைக்  கின்றது. எதிர்த்து நிற்கத் துணிந்த வன் தான் இனி இந்திய மண்ணில் தன்மானத்துடன் வாழ முடியும். நெருப்பை நெஞ்சில் ஏந்தி வாருங்கள்; பாஞ்சாலியின் விரிந்த கூந்தலை முடிப்போம். மாரீச மானின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்! - மல்லை சி.ஏ.சத்யா,  துணைப் பொதுச் செயலாளர், மதிமுக.