tamilnadu

img

மரபியல், தொல்லியல் துறைகளின் ஆய்வு உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்வோம்!

சு.வெங்கடேசன் எம்.பி., பேச்சு

மதுரை, ஏப்.30-  வரலாற்று புரட்டுகளை அம்பலப் பப்படுத்த அறிவியல், இலக்கியம், வரலாறு, மரபியல், தொல்லியல் துறை களில் நடக்கும் ஆய்வின் உண்மை யான முடிவுகளை மக்களிடம் கொண்டு செல்வோம் என்று சு.வெங்கடேசன் எம்.பி.,கூறினார். தமிழ் மரபு அறக்கட்டளை (பன் னாட்டு அமைப்பு) பிச்சு அறக்கட்டளை, மடீட்சியா கிளப் ஆகியவற்றின் சார்  பில் தமிழ் வம்சாவளியை புரிந்து  கொள்ள ஒரு அறிவியல் பூர்வமான  கலந்துரையாடல் கூட்டம் மதுரையில்  மடீட்சியா அரங்கில் சனிக்கிழமை யன்று நடைபெற்றது.  இந்நிகழ்வுக்கு சர்வதேச தமிழ் வர லாற்று அமைப்பின் தலைவர் டாக்டர் கே.சுபாஷினி தலைமை வகித்தார். பண்டைய டிஎன்ஏ பகுப்பாய்வு பற்றிய பிச்சு அறக்கட்டளை நிறுவனர் டாக்டர்  ஆர்.பிச்சப்பன் பேசுகையில், ஆப்பி ரிக்காவில் இருந்து வந்து இன்றும் அந்த  மரபு வழியாக வாழக்கூடியவர் விரு மாண்டி. இவர் மதுரை மாவட்ட ஜோதிர்  மாணிக்கம் கிராமத்தில் வசித்து வரு கிறார். இந்தியாவில் இருக்கும் தமிழர் கள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா சென்றனர். இன்  றைக்கும் ஆஸ்திரேலியாவில் தமி ழர்கள் பலரும் வாழ்ந்து வருகிறார்கள்.  சிந்து சமவெளி ஆய்வாளர் பால கிருஷ்ணன் கடந்த சில தினங்களுக்கு முன் சிந்து சமவெளியில் எடுக்கப்பட்ட எழுத்துக்களுக்கும் கீழடியில் எடுக்  கப்பட்ட எழுத்துக்களுக்கும் தொடர்பு  உள்ளது என்று கூறினார். இந்தியாவில்  முதல் மனிதன் தமிழ் மனிதனாகத்தான் இருக்க முடியும் என்று தெரிவித்தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பின ரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் உரையாற்றியதாவது:  பேராசிரியர் பிச்சப்பன் மரபணு வியல் ஆய்வில் இந்தியாவில் முன் னோடியான ஆளுமை. அவரது ஆய் வில்தான் M180 வகைமை மரபணு ஜோதிர்மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த விருமாண்டிக்கு இருந்தது கண்டறியப்பட்டது.

தொல்லியல் ,மானிடவியல், மர பணுவியல், உயிரியல் மற்றும் வர லாற்றுத்துறை ஆய்வுகள் ஒன்றுக் கொன்று பங்களிப்பு செய்து வரும் காலம் இது. ஒரு துறையின் இருளை மற்றொரு துறையின் கண்டுபிடிப்பு ஒளி பாய்ச்சி அகற்றுகிறது.  கீழடியின் தொல்லியல் ஆய்வில் அனைத்துத் துறைகளும் பங்களிப்பு செய்துவருவது, நம் காலத்தின் பெரும் கண்டுபிடிப்பாக அதனை மாற்றியுள் ளது. நாடாளுமன்ற கல்வி நிலைக்குழு வில் நான் இருக்கிறேன். இது நமக்கு கிடைத்துள்ள ஒரு பெரு வாய்ப்பு. நாடா ளுமன்றத்தில் கேட்க முடியாத சில  கேள்விகளை இந்த குழுவின் மூலம்  நேரடியாக கேட்கலாம். சிந்து சமவெளி நாகரிகத்தின் ஒற்றைக் கொம்பு மிரு கத்தை குதிரைதான் என்று நிரூபிக்க அறிவுத்துறையிலும் அரசியல் துறை யிலும் நிகழும் புரட்டுகள் கொஞ்சநஞ்ச மல்ல. இந்தியாவின் பனிரண்டாயிரம் ஆண்டு பண்பாட்டு வரலாற்றை எழுத கலாச்சார அமைச்சகம் ஒரு குழுவை அமைத்தது. இந்த ஆய்வுக்குழுவில் தென் மாநிலங்களைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை. பெண் இல்லை, சிறு பான்மையினர் இல்லை. எனவே இந்த குழுவை கலைக்க  வேண்டும் என்று நான், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 32 பேரிடம் கையெ ழுத்துக்களை பெற்று அதை குடியரசு தலைவரிடம் வழங்கினேன். அந்த குழு  தற்போது கலைக்கப்பட்டுள்ளது.  அறிவியல், இலக்கியம், வரலாறு, மரபியல், தொல்லியல் துறைகளில் நடக்கும் ஆய்வின் உண்மையான முடிவுகளை அனைவரிடமும் கொண்டு செல்வோம். சாதியின்  பெயராலும்  மதத்தின் பெயராலும் உருவாக்கப்பட்ட  ஏற்றத்தாழ்வுகள் எவ்வளவு பெரிய கற் பிதம் என்பதை எடுத்துச்சொல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.  மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர். ஜி. குமரேசன், தெபி துணைத் தலைவர் - இணை நிறு வனர் பேரா. டாக்டர் என். கண்ணன், மடீட்சியா தலைவர் எம்.எஸ்.  சம்பத், மடீட்சியா கிளப் தலைவர் எம். இளங்கோ  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  டெபி டாக்டர் ஆர். பாமா நிகழ்ச்சி யினை தொகுத்து வழங்கினார்.