சென்னை, மார்ச் 5- போக்குவரத்து கழகங்களுக்கு வரவுக்கும் செலவுக்கும் இடையேயான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் சென்னை பல்லவன் சாலையில் மாநகர போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு உண்ணாநிலை போராட்டம் சனிக்கிழமை (மார்ச் 5) நடை பெற்றது. அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் ஆர்.துரை, அரசு விரைவு போக்குவரத்து கழக தலைவர் செந்தில் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். சம்மேளனத் தலைவர் அ.சவுந்தரராசன், அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் எம்.சந்திரன், சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திரு வேட்டை, வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வி.தயானந்தம், அரசு விரைவு போக்குவரத்து கழக பொதுச் செயலாளர் எம்.கனகராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்தார். இதுகுறித்து அ.சவுந்தரராசன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2 ஆண்டு களாக ஒப்பந்தம் போடாமல் இழுத்தடித்து கொண்டே அதிமுக அரசை எதிர்த்து பலகட்ட போராட்டங்களை நடத்தினோம், பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத் தினோம். தொழிலாளர் துறையை நாடி னோம். அனைத்து அரசியல் கட்சிகளும் எங்களுக்கு ஆதரவாக தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்கள். ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண் டிய பணப்பலன்கள், ஓய்வூதியம், பஞ்சப்படி மறுக்கப்படுவது குறித்தும் கோரிக்கை எழுப்பினோம். அதற்கும் மக்கள் மிகப் பெரிய ஆதரவு அளித்தனர்.
இன்றைய முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானது. அரசு உடனடியாக தீர்க்க வேண்டும் என்று கூறியது மட்டுமல்லாமல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் குரல் கொடுத்தார். அன்றைக்கு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டங் களை ஆதரித்த திமுக, ஆட்சிக்கு வந்தபிறகு உடனடியாக நிறைவேற்றிருக்க வேண்டும் என நாங்கள் கூறவில்லை. ஆனால் ஏறக்குறைய ஒரு வருடம் நிறை வடைய உள்ள நிலையில், இதுவரை அதற்கான எந்த முயற்சியையும் அரசு மேற் கொள்ளவில்லை. எனவே உடனடியாக ஊதிய பேச்சு வார்த்தையை துவக்க வேண்டும், ஓய்வூதி யர்களின் பிரச்சனைகளை தீர்க்க நட வடிக்கை எடுக்க வேண்டும், வரும் நிதி நிலை அறிக்கையில் இதற்குரிய உரிய நிதியை ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.