சட்டமன்ற செய்திகள்
திருக்குவளையில் சுற்றுலா ஆய்வு மாளிகை
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி திருக்கு வளை கிராமம் என்பது வட்டத் தலைநகராகும். அனைத்து அரசு அலுவலகங்களும் அங்கு உள்ளன. நீதிமன்றமும் இருக்கிறது.எனவே, அங்கு ஒரு சுற்றுலா ஆய்வு மாளிகை கட்டிக்கொடுக்க அமைச்சர் முன்வருவாரா? என்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “தோழர் நாகை மாலி வைத்திருக்கும் கோரிக்கை மிகவும் முக்கியமா னது. கலைஞர் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, அந்த கிரா மத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக் கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, வட்டாட்சியர் அலுவல கம் அமைத்து கொடுத்துள்ளோம். குறுகலாக இருந்த சாலை கள் அனைத்தையும் அகலப்படுத்தி விரிவாக்கம் செய்து கொடுத்திருக்கிறோம். எனவே, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சுற்றுலா ஆய்வு மாளிகை கட்டி கொடுப்ப தற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
சுந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம்
சுந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படு மா? என்று சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டி யன் வினவினார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவ ரான சுந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்றார்.
3 ஆண்டுகளில் 10.86 கோடி மரங்கள்
பசுமை பரப்பினை அதிகரித்து காலநிலை மாற்றத்தின் வீரி யத்தைக் குறைக்க அரசு ஆவன செய்யுமா என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் கோ.க.மணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, “தமிழகத்தின் பசுமை பரப்பை 23.733 சதவீதத்தை உயர்த்தும் நோக்கத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் முதல மைச்சரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் 265 கோடி மரக்கன்றுகள் நடப்படும். கடந்த 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன. 36 மாவட்டங்களில் 33.23 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. ரூ.25 கோடியில் 100 மரகத பூஞ்சோலைகள் அமைக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டு 83 மரகத பூஞ்சோலைகள் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் கடல் பகுதி களில் உயர் அரண் ஏற்படுத்தும் திட்டம் ரூ.25 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை போன்ற பெருநக ரங்களில் வனப்பரப்பை அதிகரிக்க ஆதி வனம் மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் செயல்படுத்தப் படும்” என்றார்.
கடல் அரிப்பை தடுக்க..
மரக்கன்றுகள் 6 மாத பருவத்தில் நடும் போது ஆடு, மாடுகள், கன்றுகள் சாப்பிட்டு சேதப்படுத்தும் நிலை உள்ளது. சீனாவில் 5 ஆண்டுகள் வரை மரம் வளர்த்து அதன் பின் வேறு இடங்களில் நடப்படும் முறை தமிழ்நாட்டில் கொண்டு வரப்படுமா என்று ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வனத்துறை அமைச்சர் பொன் முடி, பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் 650 ஹெக்டேர் தரம் குன்றிய அலையாத்தி காடுகள் மீட்டு எடுக்கப்பட்டு உள்ளன. 310 ஹெக்டேரில் புதிய காடுகளில் 12 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அலையாத்தி காடுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் தமிழ்நாட்டில் வனத்துறையால் 8.3 லட்சம் அலையாத்தி வகை தாவரங்கள் நடப்பட்டுள்ளன. மரக்கன்றுகளை அனைத்து இடங்களிலும் நட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலோரங்களில் கடல் அரிப்பை தடுக்க பருத்தி, பனை, முந்திரி போன்ற மரங்கள் 288 ஹெக்டேர் பரப்பளவில் நடப்பட்டுள்ளன” என்றார்.
டாஸ்மாக் வழக்கை மாற்ற கோரவில்லை
சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே செய்தியாளர் களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஏன் கேட்கிறது? உங்க ளுக்கு பயமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனி சாமி கேட்டிருக்கிறார். எங்களுக்கு மடியில் கணமும் இல்லை - வழியில் பயமும் இல்லை. எங்களது கவுண்டரை அவர் ஒழுங்காக படித்துப் பார்க்கவில்லை. எங்களது கோரிக்கை யையும் அவர் பார்க்கவில்லை. டாஸ்மாக் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்குமாறுதான் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தோம்” என்றார்.