சென்னை,பிப்.4- திரைப்பட உலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பழம்பெரும் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் சனிக்கிழமை யன்று (பிப்.4) காலமானார். அவருக்கு வயது 78. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் வேலூரில் இசைக் குடும்பத்தில் துரை சாமி ஐயங்கார்-பத்மாவதி தம்பதிக்கு மகளாகப் பிறந்த வர். அவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் கலைவாணி. முதன்முதலாக 1971 ஆம் ஆண்டில் இந்தி திரைப் படம் மூலம் பாடகியாக அறிமுகமானார். அன்று முதல் பல தலைமுறை களைக் கடந்து இன்றும் அவரது குரல் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து வருகிறது. தீர்க்க சுமங்கலி திரைப் படத்தில் கவிஞர் வாலி எழுத, எம்.எஸ்.வி இசையில் மல்லிகை என் மன்னன் மயங் கும்...பாடலை பாடினார். இதுதான் அவரது முதல் தமிழ்த் திரையிசைப் பாட லாகும். அதனைத் தொடர்ந்து மேகமே... மேகமே, ஏழு சுரங்க ளுக்குள்... என்னுள்ளே எங்கும் ஏங்கும் கீதம்... கவிதை கேளுங்கள் கரு வில்... உள்ளிட்ட காலத்தை வென்று நெஞ்சில் நிலைத் திருக்கும் பல பாடல்களைப் பாடிய வாணி, தமிழ், இந்தி, ஒடிசா, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பெங்காளி உட்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவர் திரையிசை மட்டு மின்றி, கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்களை யும் பாடுவதில் வல்லவராக வும் விளங்கினார்.
சிறந்த பின்னணிப் பாடகிக்காக மூன்று முறை தேசிய விருது பெற்ற வர். தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல மாநில விருது களையும் பெற்றவர். கடந்த வாரம் அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டி ருந்த நிலையில், விருதைப் பெறுவதற்கு முன்னர் அவர் காலமானது அவரது ரசிகர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்குப் பதிவு
படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றி யில் அடிபட்டு அவர் உயிரிழந்ததாக காவல்துறை யின் முதல் கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வாணி ஜெயராம் மரணம் இயற் கைக்கு மாறானது என்று ஆயிரம் விளக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முதலமைச்சர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டி ருக்கும் இரங்கல் அறிக்கை யில், “இந்தியத் திரையு லகின் புகழ்பெற்ற இசைக்கு யிலாக விளங்கிய பின்ன ணிப் பாடகி, கலைவாணி என்ற வாணிஜெயராம் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அவரது மறைவு, இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர் களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலை யும் தெரிவித்துக் கொள்கி றேன்”என்று தெரிவித்துள் ளார்.