உருகுவேயில் இடதுசாரி மற்றும் ஜனநாயக அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள “விரிவடைந்த முன்னணி”யின் தலைவராக பெர் னாண்டோ பெரிரா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தொழிற்சங்க அரங்கத்தில் தலைவராகப் பணியாற்றிய பெரிரா, உட்கட்சித் தேர்தலில் 67.2 வாக்குகளைப் பெற்றார். இந்த அளவுக்கு வாக்குகளைப் பெற்று விரி வடைந்த முன்னணியின் வரலாற்றில் எந்த தலைவரும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலைகள் கடுமையாக ஏறி வருவ தால் பல உயிர்கள் இழப்பு ஏற்படலாம் என்று ஸ்காட் லாந்து எரிபொருள் துறையின் அமைச்சர் மைக்கேல் மதேசன் எச்சரித்துள்ளார். இந்த விலைகள் உயர்வதை பிரிட்டன் அரசு கட்டுப்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், எரிபொருள் விலை ஏறி வருவதால் ஏராளமான குடும்பங்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளன என்றார். பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்க ளைப் பாதுகாக்கும் வகையில் அரசு ஏதாவது செய்ய வில்லை என்றால் உயிர்களைப் பாதுகாக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
பாலஸ்தீனப்பகுதிகள் மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருக் கும் பாலஸ்தீனியர்கள் தங்கள் உறவினர்களோடு இணைந்து கொள்வதை இஸ்ரேல் தடை செய்துள்ளது. அவசர, அவசரமாக இதற்கான சட்டத்தை இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் சாகித் நாடாளுமன்றம் முன்பாக வைக்கப் போகிறார். ஏற்கனவே இந்த சட்டம் நடை முறையில் இருந்தது. அதை நீட்டிக்க வேண்டாம் என்று கடந்த ஆண்டு ஜூலையில் இஸ்ரேல் நாடாளு மன்றம் வாக்களித்தது.