G ஒன்றிய அரசின் பொருளாதாரத் தடைகள்
G மாநிலத்திற்கு எதிரான ஆளுநரின் போக்குக்கு கண்டனம்
திருவனந்தபுரம், செப்.16- ஒன்றிய அரசின் அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடைகள் மற்றும் மாநி லத்திற்கு எதிரான ஆளுநரின் போக்கைக் கண்டித்து இடது ஜனநாயக முன்னணி யின் மாநிலத் தலைவர்கள் மற்றும் திரு வனந்தபுரம் மாவட்ட மக்கள் பிரதிநிதி கள் ஆளுநர் மாளிகை முன்பு செப் டம்பர் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சத்தியா கிரகப் போராட்டம் நடத்த உள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் இ.பி.ஜெயராஜன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: கேரளாவின் விரிவான வளர்ச்சி மற்றும் நலப்பணிகளுக்கு இடை யூறாக உள்ள ஒன்றிய அரசின் கொள் கையை சரி செய்ய வேண்டும், அறி விக்கப்படாத பொருளாதார தடை களை விதித்து கேரளாவை திணறும் நடவடிக்கைகளில் இருந்து மீட்க வேண்டும் என்பது இந்த போராட்டத் தின் முக்கிய முழக்கம். ஒன்றிய அரசு இப்படி மாநிலத்தை நசுக்க முயலும் போது கூட கேரளா வில் உள்ள எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்து ஒரு விரலை கூட தூக்க தயா ராக இல்லை. எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டின் பின்னணியில் கண்டு கொள்ளாத அரசியல் நிலைப்பாடும் ஒன்றிய அரசின் மீதான நம்பிக்கையும் உள்ளது. இதுவும் கேரளத்தைப் பழி வாங்கும் மனோபாவமாகவே பார்க்க முடியும்.
மாற்றாந்தாய் மனப்பான்மை
கேரளா ஒரு ரூபாயை ஒன்றிய அரசு க்கு வரியாக செலுத்தும் போது, அதற்கு ஈடாக மாநில பங்கு 25 பைசாவிற்கும் குறைவாக உள்ளது. அதே நேரத்தில், உத்தரப்பிரதேசத்தில் ஒரு ரூபாய்க்கு மாநில பங்காக ஒரு ரூபாய் எண்பது பைசா வீதம் திருப்பிச் செலுத்தப்படு கிறது. 10ஆவது நிதிக் கமிஷன் முதல் 15ஆவது நிதிக் கமிஷன் வரை வகுக் கக் கூடிய தொகுப்பின் மூலம் மாநி லத்தின் வருமானம் 3.8 சதவிகிதத்தில் இருந்து 1.9 சதவிகிதமாகக் குறைக் கப்பட்டுள்ளது. இதனால் மட்டும் ரூ.18,000 கோடி பற்றாக்குறை ஏற்பட் டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநிலத்தின் மொத்த வருவாயில் 45 சதவிகிதத்தை ஒன்றிய அரசு அளித்து வந்தது. அது தற்போது 30 சதவிகிதம் ஆகிவிட்டது. ரெவினியூ வருவாயில் 70 சதவீதத் தை மாநிலம் கண்டுபிடிக்க வேண்டும். சில மாநிலங்களுக்கு 70 சதவிகிதம் வரை மத்தியப் பங்கு கொடுக்கும் போது கேரளாவை நோக்கிய இந்த மாற்றாந்தாய் கொள்கை கையாளப் படுகிறது.
மறுக்கப்படும் ஜிஎஸ்டி இழப்பீடு
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை மறுக்கப்படுவதால் ஆண்டுக்கு ரூ. 12,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படு கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் கடன் வாங்கும் வரம்பை 3.5 சத விகிதமாகக் குறைப்பதும் கொடூரமா னது. இது தவிர, கிப்ஃபி மற்றும் ஓய்வூதிய நிறுவனம் எடுத்த கடனை மாநில அரசின் கடனாகக் கருதும் அணுகுமுறையும் மேற்கொள்ளப்படு கிறது. ஒன்றிய அரசின் இத்தகைய நட வடிக்கைகளுடன், ஆளுநரும் மாநில அரசுக்கு எதிரான மறுப்பு அணுகு முறையையும் மேற்கொள்கிறார். மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களில் கையெழுத்திடுவ தில்லை. அவ்வாறு கையொப்பமிட வில்லை என்றால், அதை திருப்பி அனுப்பலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம், ஆனால் அதை செய்யாமல், கோப்புகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. கால வரையறையின்றி கோப்பை வைத்தி ருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானதும் கூட்டாட்சியின் சாரத்திற்கு எதிரானது மாகும். இந்த அணுகுமுறையை ஆளு நர் மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி சத்தியாகிரகப் போராட் டம் நடைபெற உள்ளது. போராட்டம் வெற்றியடைய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.