tamilnadu

img

“கற்றலும், கற்பித்தலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இரு கண்கள்”

மதுரை, ஜூன் 10- கற்றலும், கற்பித்தலும் ஒரு  வழிப்பாதையல்ல... அது இரு வழிப்பாதை... என்பதை நிரூ பித்துள்ளார் மதுரை மாவட்டத் தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசி ரியர் ஒருவர். கற்றல், கற்பித்த லோடு தமது பணி நிறைவடைய வில்லை... மாணவர் சமூகத் திற்கு கல்விக்கு ஏதாவது செய்ய  வேண்டும் என்ற தனது லட்சி யத்தையும் நிறைவேற்றியுள்ளார் அந்த ஆசிரியர். மதுரை மாவட்டம் திருமங்க லத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி யைச் சேர்ந்தவர் ஆசிரியர் என். அருணாச்சலம். இவர் உறங்கான் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணி யாற்றிவருகிறார். தற்போது மதுரை  தெற்காவணிமூல வீதி பகுதியில் வசித்து வருகிறார். உறங்கான்பட்டி அரசு மேல்  நிலைப்பள்ளியில் 838 மாண வர்கள் படித்து வருகின்றனர். 10,  12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மேலூர் தாலுகாவில் அதிகளவு தேர்ச்சி சதவீதத்தை காட்டியுள்ள பள்ளிகளில் இதுவும் ஒன்று. சமீபத்தில் வெளியான 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் டி.மகாலெட்சுமி என்ற  மாணவி 600-க்கு 556 மதிப்பெண் கள் பெற்றுள்ளார். ஒன்பது மாண வர்கள் 500 மதிப்பெண்கள் பெற் றுள்ளனர். விளையாட்டிலும் குறு வட்ட அளவில் இப் பள்ளி சாதனை நிகழ்த்தி வருகிறது.

இந்தப் பள்ளியில் அதிகமான  மாணவர்கள் உள்ளதால் போது மான வகுப்பறைகள் இல்லை. இதையடுத்து தலைமையாசிரியர்  என்.அருணாச்சலம் தனது சொந்த  நிதி ரூ.10 லட்சத்தை மதுரை ஆட்சி யரிடம்  வழங்கி நமக்கு நாமே திட்டத்  தின் மூலம் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர கோரிக்கை விடுத்தார். ஆட்சிய ரும் அரசு நிதி ரூ.20 லட்சம் விடு விப்பதாகவும் அதன் மூலம் ரூ.30  லட்சம் செலவில் வகுப்பறைகள் கட்டப்படும் என்றும், பணிகள் விரைவில் தொடங்கும் எனக்  கூறி அவரை பாராட்டி கௌரவித் தார். இந்த நிலையில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் சனிக்கிழமை தலைமை யாசிரியர் என்.அருணாச்சலத்தை பாராட்டி கைத்தறி ஆடை அணி வித்து கௌரவித்தார். அப்போது பேசிய சு.வெங்கடேசன், “ பள்ளிக் காக உதவி செய்துள்ளது பணம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. உணர்வு சம்பந்தப்பட்டது” என்றார்.  நிகழ்வில்  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன் னுத்தாய், எஸ்.பாலா ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வு முடிந்த  சிறிது நேரத்தில், தமிழ்நாடு முத லமைச்சர் அலுவலகத்திலிருந்து தமக்கு அழைப்பு வந்துள்ளது என்ற  தகவலை ஆசிரியர் என்.அரு ணாச்சலம் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். கற்றலும்... கற்பித்தலும் ஆசி ரியர்களுக்கு இரு கண்கள். மாண வர்களுக்கும், சமூகத்திற்கும் ஏதா வது செய்யவேண்டும். அது பள்ளி யின் வளர்ச்சிக்கு பயன்படட்டும் என்ற அடிப்படையில் உதவியுள் ளேன் என்றார் ஆசிரியர் என்.அரு ணாச்சலம்.