tamilnadu

img

பொதுத்துறைகளில் சேவையே பிரதானம்; லாபம் அல்ல

சென்னை, ஜூலை 20 - மக்களுக்கு சேவை வழங்கும் பொதுத்துறைகளில் லாபம் பார்க்க கூடாது என்று மின் ஊழி யர்கள் நடத்திய கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 17வது மாநில மாநாடு ஆக.12-14 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இதனையொட்டி மாநாட்டு வரவேற்பு குழு சார்பில், ‘மின்துறையை பொதுத் துறையாக பாதுகாத்திட’ வலியுறுத்தி திங்க ளன்று (ஜூலை 18) ராஜா அண்ணா மலை மன்றத்தில் கருத்தரங்கம் நடை பெற்றது.

சவால்களை முறியடிப்போம்

இந்த நிகழ்வில் ‘இந்திய தொழி லாளி வர்க்கம் சந்திக்கும் சவால்கள்’  என்ற தலைப்பில் உரையாற்றிய  சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பேசிய தன் சுருக்கம் வருமாறு :  வேலை இழந்தவர்கள், இல்லா தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல கோடி மக்கள் வாழ் வாதாரத்தை இழந்து வரும் நிலையில், ஒரு சில முதலாளிகளின் சொத்துக்கள் மட்டும் பல ஆயிரம் கோடிகளாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எதிரி யார் என்பதை அடை யாளம் காண்பதில் தவறி விடுகி றோம். பிரச்சனைகளை ஏற்படுத்தும் அரசை மட்டும் எதிர்க்காமல், கொள்கைகளை உருவாக்கும் முதலாளித்துவ வர்க்கத்தையும் ஒருசேர எதிர்க்க வேண்டும். தொழி லாளி வர்க்கத்தின் பிரச்சனைக்கு மூல காரணம் முதலாளித்துவ கொள்கை களே என்பதை வெகுமக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். தொழிலாளர்களின் ஒற்றுமையை யும், தொழிற்சங்க அமைப்புகளை யும்  ஆட்சியாளர்கள் சீர்குலைக்கின்ற னர். அதற்கு மதம், சாதியை பயன் படுத்துகின்றனர். சட்ட உரிமைகள்,  சலுகைகள், பணியிட பிரச்சனைக ளுக்காக போராடும் அதேநேரத்தில், சாதிய, சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராட வேண்டியது தொழிலாளி வர்க்கத்தின் கடமை. முதலாளித்துவ கொள்கைகள், ஆட்சியாளர்களின் சூழ்ச்சி, சாதி, மத ஒடுக்குமுறை போன்ற சவால்களை முறியடித்து முன்னேறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டு போராட்டம்

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலை வர் கே.சாமிநாதன் ‘பொதுத்துறை அவலங்களும், ஊழியர்கள் நிலையும்’ எனும் தலைப்பில் பேசுகை யில், “அரசின் கீழ் பள்ளிகள், பேருந்து கள் வந்த பிறகுதான் ஏழைகள் கல்வி கற்க முடிந்தது. 4, 5, 6ஆம் நிலை நகரங்களில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களே கிடையாது. குக்கிராமங்களிலும் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களே சேவை அளிக்கின்றன. மக்களிடம் செல்வதும்; மக்களிடம் சொல்வதும் தொழிற்சங்கத்தின் கடமை. பொதுத் துறை பாதுகாப்பு என்பது சிந்தாந்தம் சார்ந்தது” என்றார். “ஏழை எளிய மக்களுக்கான பொருளாதாரத்தில் இருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும் என்பதே  உலகமயம். பொதுத்துறை தனியார் மயமானால் ‘மாடல் எம்பிளாயர்’ என்ற  கருத்தாக்கம் தாக்கப்படும். தொழிற் சங்கங்கள் தனித்து போராட வேண்டும். அதேசமயம் பலதுறை கூட்டுப் போராட்டம் அவசியம். பாம்பின் வால், உடலில் அடித்தால்  பலவீனப்படும், தலையில் அடித்தால் தான் உயிர் போகும். அதுபோலத்தான் தனித்த போராட்டங்கள் அரசை பலவீனப்படுத்தும். ஒன்றுபட்ட போராட்டமே இறுதி வெற்றியை கொடுக்கும்.” என்றும் அவர் கூறினார். “நிரந்தர தொழிலாளர்களும், ஒப்பந்த தொழிலாளர்களும் ஒன்று பட்டு போராட வேண்டும். தொழிற் சங்க இயக்கத்தின் பலம் அதன் எண்ணிக்கையில் மட்டுமல்ல, மக்களின் கருத்தாக மாற்றுவதிலும் உள்ளது. கரங்கள் வலு பெறும் போது, கைவிலங்குகள் முறியும். ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள்  கரங்கள் உயரும்போது, மின்ஊழி யர்களும் அதில் இருப்பார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தனியார் லாபத்திற்கு....

‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ’ எனும் தலைப்பில் பேசிய மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், இந்தியாவில் 52 விழுக்காடு மின்சாரத்தை தனியார் உற்பத்தி செய்கின்றனர். இதன் காரணமாக உற்பத்தியிலிருந்து அரசு விலகி வருகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 12 ரூபாய்க்கு மேல் ஒரு  யூனிட் மின்சாரத்தை வாங்கக் கூடாது  என்கிறது. அதனை மீறி ஆட்சியாளர் கள் கொள்முதல் செய்கின்றனர். இதன் அடுத்தகட்டமாக, மின்சார திருத்த சட்டத்தை கொண்டு வரு கின்றனர். அதன்படி, யார் யாரை  நுகர்வோராக வைத்துக் கொள்ளலாம் என்று தனியார் நிறுவனம் முடிவு செய்யும். ஸ்மார்ட் மீட்டரை பொருத்தும். தனியார் முதலாளிகள் லாபம் ஈட்ட, மின் வாரியத்திடம் உள்ள நுகர்வோர் தகவல்களை தனியாருக்கு கொடுக்க உள்ளனர். மக்கள் எதிர்ப்பை சமாளிக்க இலவச மின்சாரத்திற்கு பதிலாக அரசு வங்கியில் மானியத் தொகையை செலுத்தும். கேஸ் மானி யத்தை போன்று பிறகு படிப்படியாக நிறுத்தப்படும். இது ஒன்றிய அரசின் திட்டம். இதை தமிழக அரசு காப்பி அடிக்கலாமா என்று கேள்வி எழுப்பினார். “மின்வாரிய பணிகளை அவுட்சோர்சிங் செய்கின்றனர். இதனால் நிரந்தர தொழிலாளர்கள் இல்லாத நிலை உருவாகும். ஒரு யூனிட் மின் உற்பத்திக்கு 6.93 ரூபாய் செலவாகிறது. வாரியத்திற்கு அரசு 4 ரூபாய் தருகிறது. எஞ்சிய  தொகைக்கு வாரியம் கடன் வாங்கு கிறது. இவ்வாறாக வாரியத்திற்கு சுமார் 1.30 லட்சம் கோடி கடன் உள்ளது.  இந்த நட்டத்திற்கும் ஊழியர்களுக்கும் சம்பந்தம் இல்லை. மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம் போன்றவற்றில் அரசு லாபம் பார்க்க கூடாது. இதில் உருவாகும் நடத்தை காட்டி தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கக் கூடாது.” என்று அவர் வலியுறுத்தினார்.

மின்வாரியத்திலிருந்து...

பாஜக-வின் மதவாத அரசியலை திமுக எதிர்க்கிறது. அதேசமயம் பாஜக வழியில் தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து வருகிறது. இந்த  உரிமை பறிப்புக்கு எதிராக ஒட்ட மொத்த தொழிலாளர்களும் களத்தில்  இறங்க உள்ளனர். அது மின்வாரியத் திலிருந்து தொடங்க உள்ளது என்று நிகழ்வுக்கு தலைமை தாங்கிய மத்திய அமைப்பின் தலைவர் தி.ஜெய் சங்கர் தெரிவித்தார். நிகழ்வில் மத்திய அமைப்பின் சென்னை தெற்கு மண்டலச் செயலா ளர் ஏ.முருகானந்தம், வடக்கு மண்டலச் செயலாளர் ஆர்.ரவிக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.