சென்னை, ஜூன் 27- உலகளாவிய தரம் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், வளர்ந்து வரும் தொழில்துறையில் நுழைய வழிவகை செய்யவும் பெரும் குழுமங்கள் அமைக்கப்படும். முதல்கட்டமாக 4 பெருங் குழுமங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பன்னாட்டு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) தின விழா சென்னை நந்தம்பாக்கத்தில் செவ்வாயன்று (ஜூன் 27) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தின் பொருளாதார முன்னேற் றத்துக்கு பெரும் பங்காற்றும் எம்.எஸ். எம்.இ. துறையின் முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. ஓய்வுபெற்ற அதிகாரி என்.சுந்தரதேவனின் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையில், குறுகிய கால நடவடிக்கைகள், நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் என வகைப்படுத்தப்பட்டு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளமானது கடந்தாண்டு செப்டம்பர் மாதம், “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” என்ற தலைப்பில் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. தொழில் முனை வோர்கள் 159 வகையான தொழில் உரிமங்களை 27 அரசுத் துறைகளிடம் இருந்து எளிதாக பெற சிங்கிள் விண்டோ 2.0 தளம், ஆட்சிக்கு வந்தபின் துவக்கி வைக்கப்பட்டு, இது வரை 20 ஆயிரத்து 353 விண்ணப் பங்கள் பெறப்பட்டு, இதுவரை 17 ஆயிரத்து 618 தொழில் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1,903 விண்ணப் பங்கள் பரிசீலனையில் உள்ளன.
தமிழகத்தில் பரவலாக குறுந் தொழில் நிறுவனங்கள் கொண்ட பல்வேறு குறுங்குழுமங்கள் உள்ளன. ஊரகப் பகுதிகளில் நீடித்த நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்யவும், பாலினம் மற்றும் சமூக சமநிலையை உறுதிப்படுத்திடவும் இந்த குறுங்குழுமங்களை மேம்படுத்து வது இன்றியமையாதது. குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் உலகளாவிய தரம் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வளர்ந்து வரும் தொழில்துறையில் நுழைய வழிவகை செய்யவும் பெருங்குழுமங்கள் அமைக்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டு, முதல்கட்டமாக 4 பெரும் குழுமங்கள் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டிவனத்தில் மருந்துப் பொருட்கள் பெருங்குழுமம், திருமுடி வாக்கத்தில் துல்லிய உற்பத்திப் பெருங்குழுமம், விண்வெளி மற்றும் பாதுகாப்புச் சார்ந்த பெருங்குழுமம் மற்றும் ஸ்மார்ட் மொபிலிட்டி மின் வாகனத்துறை சார்ந்த பெருங்குழுமம் ஆகியவற்றை அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.