திண்டுக்கல் மாவட்டத்தில் நில உச்சவரம்பு சட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட உபரி நிலங்களை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உபரி நிலம் - பஞ்சமர் நிலம் மீட்பு மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று மாலை பழனியில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், பி.வசந்தாமணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.