பிரிட்ஜ்டவுன், ஜன.20- பார்படாஸ் தீவில் நடை பெற்றுள்ள நாடாளுமன்றத் தேர்த லில் தற்போது ஆட்சியில் உள்ள பார்படாஸ் தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில் குடியரசு நாடாக அறிவித்துக் கொண்ட பிறகு, பார்படாஸ் நாட்டின் புதிய நாடாளு மன்றத்தைத் தேர்வு செய்வதற்கான முதல் தேர்தல் நடைபெற்றுள்ளது. மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்க ளித்திருக்கிறார்கள். தற்போதைய நாடாளுமன்றத்தில் ஆளும் தொழி லாளர் கட்சிக்கு, மொத்தமுள்ள 30 இடங்களில் 29 இடங்கள் உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் முதல் கட்ட தகவல்களின்படி, மீண்டும் தொழிலாளர் கட்சியே அதிக இடங்க ளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. கொரோனா பாதிப்பு பார்படாசை யும் விட்டு வைக்கவில்லை. அதன் பொருளதாரமும் பாதிப்புக்கு உள் ளானது. அந்நாட்டின் மக்கள் தொகை 3 லட்சத்துக்கு சற்றுக் குறைவான தேயாகும்.
அதில் 5 ஆயிரம் தொற்று க்கு ஆளாகினர். சுற்றுலாதான் பார் படாஸ் தீவின் வருமானத்தை ஈட்டித் தரும் முக்கியமான துறையாகும். தொற்று பாதிப்பால் வெளிநாடு களில் இருந்து சுற்றுலா வருவது நின்று போனதால் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வரும் நாட்களில் பொருளாதா ரத்தை சரிசெய்து விட முடியும் என்று அந்நாட்டின் பிரதமர் மியா மோட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். குடியர சான பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் தற்போதைய நிகழ்வுகள் பார்படாசின் எதிர்காலத் திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததா கும். நாட்டின் இறையாண்மையை உறுதி செய்யும் வகையில் வரும் நாட்கள் அமையும் என்று பிரதமர் மியா மோட்லி அறிவித்துள்ளார். மியா மோட்லி, பார்படாசின் முதல் பெண் பிரதமர் என்ற பெயர் பெற்றவ ராவார். மே 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தார். அடுத்த ஆண்டுதான் அடுத்த பொ துத்தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், குடியரசு அறிவிப்பு வெளி யிட்டதால் முன்கூட்டியே தேர்தலை நடத்த முடிவு செய்து நாடாளுமன்றத் தைக் கலைக்க பரிந்துரை செய்தி ருந்தார். முழுமையான தேர்தல் முடி வுகள் ஓரிரு நாட்களில் வெளியா கும்.