கொச்சி, மே 11- கேரளத்தில் திருக்காக்கரை இடைத்தேர்தலில் இடது ஜன நாயக முன்னணிக்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன் னாள் ஒன்றிய அமைச்சருமான கே.வி.தாமஸ் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கு எல்டிஎப் ஒருங்கிணைப்பாளர் இ.பி. ஜெயராஜன் வரவேற்பு தெரிவித் துள்ளார். திருக்காக்கரை தொகுதியில் இடதுசாரி வேட்பாளர் டாக்டர் ஜோ ஜோசப்பை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாக கே.வி.தாமஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித் தார். முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கும் தேர்தல் மாநாட்டில் கலந்து கொள்வதாக கே.வி.தாமஸ் தெரிவித்தார். ‘இந்த தேர்தல், வளர்ச்சிக்கான தேர்தல் என்றும், கேரளா இனி வளர்ச்சியில் இருந்து பின்னோக்கி செல்ல முடியாது’ என் றும் கே.வி.தாமஸ் கூறினார். 2018ஆம் ஆண்டு முதல் தன்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். காங்கிர சில் இருந்து நீக்க முடியுமானால் வெளியேற்றட்டும்.
கண்ணூர் மண்ணில் கால் வைத்தால் கட்சி யில் இருந்து நீக்கி விடுவதாக கூறி னார்களே? என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். காங்கிரஸ் ஒரு அமைப்பு மட்டுமல்ல, தொலை நோக்கு பார்வையும் கூட என்றும், தான் காங்கிரஸ்காரனாகவே தொட ர்ந்து இருப்பேன் என்றும் கே.வி.தாமஸ் கூறினார். மகிழ்ச்சி அளிக்கிறது திருக்காக்கரை இடைத்தேர்த லில் எல்.டி.எப் உடன் இணைந்து பணியாற்ற கே.வி.தாமஸ் வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக எல்.டி.எப் ஒருங்கிணைப்பாளர் இ.பி.ஜெயராஜன் தெரிவித்தார். வளர்ச்சி விவகாரங்களில் காங்கிரஸின் நிலைப்பாடு தவறானது. அந்த அடிப்படையில் எல்.டி.எப் உடன் ஒத்துழைக்க கே.வி.தாமஸ் முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். தோல்வி பயம் உள்ளவர்கள் எந்த வேடத்தையும் அணிவார்கள். வகுப்புவாத சக்திகளுடன் கூட்டணி வைக்க ஐக்கிய ஜனநாயக முன் னணி அஞ்சாது என ஈ.பி.ஜெய ராஜன் தெரிவித்தார். அவருக்கு ஏதேனும் பதவி கொடுக்கப்படுமா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கே.வி.தாமஸ் பதவிக்காக செயல்படும் நபர் அல்ல. அவர் சோனியாகாந்தியுடன் நெருக்க மான- உயர்ந்த நிலையில் உள்ள தலைவர் என்றும் இ.பி.ஜெயராஜன் கூறினார்.