சென்னை, மே 8- 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கேரள வித்யாலயம் பள்ளி மாணவர்கள் 91 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை பூந்தமல்லி நெடுஞ் சாலையில் உள்ள கேரள வித்யாலயம் பள்ளியைச் சேர்ந்த 108 மாணவர்கள் இந்தாண்டு 12ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 98 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் 600க்கு 565 மதிப்பெண்கள் பெற்று வி.பி.கார்த்திக் பள்ளியில் முதல் இடத்தையும், 553 மதிப்பெண்கள் பெற்று எஸ்.அக்ட்சயகுமார் இரண்டாம் இடத்தையும், 552 மதிப்பெண்கள் பெற்று கே.எஸ்.அபர்னா 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். 30 மாண வர்கள் 75 விழுக்காட்டிற்கும் அதிக மான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இரண்டு மாணவர்கள் அக்கண்டன்சி பாடப்பிரிவில் 200க்கு 200 மதிப் பெண்கள் பெற்றுள்ளனர்.