கேரள சுகாதாரத்துறைக்கு சர்வதேச அங்கீகாரம் ஆஸ்திரேலியாவில் அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு விருது
விக்டோரியா மாகாண சட்டமன்றம் வழங்கியது
இடது ஜனநாயக முன்னணி ஆளும் கேரள மாநி லத்தின் சுகாதாரத்துறை அமைச்ச ராக இருப்பவர் வீணா ஜார்ஜ். இவர் ஆஸ்திரேலியாவின் விக்டோ ரியா மாநில சட்டமன்றத்தில் (பார்லிமெண்ட் ஆப் விக்டோ ரியா) ஒரு சிறப்பு அமர்வின் போது விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு ள்ளார். இந்நிகழ்வின் போது விக்டோரியா சட்டமன்ற மேலவை தலைவர் ஷான் லீன், வீணா ஜார்ஜை வரவேற்றார். தொடர்ந்து விக்டோரியா அரசுத் தலைமை கொறடா லீ டார்லாமிஸ் வீணா ஜார்ஜ்க்கு சிறப்பு விருதை வழங்கினார். ஒரு இந்திய மாநில அமைச்சருக்கு வெளிநாட்டு சட்ட மன்றத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, விருது வழங்கப் படுவது அரிய நிகழ்வுகளில் ஒன்றாகும். குறிப்பாக வீணா ஜார்ஜுக்கு வழங்கப்பட்ட விருது அங்கீகாரம் கேரளாவிற்கும், விக்டோரியா மாநிலத்திற்கும் இடையே பொது சுகாதார அமைப்புகள், கொள்கை பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு போன்ற துறைகளில் வளர்ந்து வரும் கூட்டுறவுக்கான பெரிய வடிவத்தின் ஒரு பகுதி என்றும் செய்திகள் வெளியாகி யுள்ளன. சர்வதேச அங்கீகாரம் கேரளாவின் பொது சுகாதார அமைப்பு பல தசாப்தங்களாக சமூக சீர்திருத்தக் கொள்கைகள், பொது முதலீடுகள் மற்றும் நிறு வன மேம்பாடுகளின் விளைவாக உருவாகியுள்ளது. இது இந்தியா வின் பிற பகுதிகளிலிருந்து இதை வேறுபடுத்துகிறது. தேசிய அள விலான சுகாதார திட்டங்கள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பே, கேரளா முதன்மை சுகாதார மையங்கள் (PHCs), சமூக சுகா தார பணியாளர்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளின் திறமையான வலையமைப்பை நிறுவியது. இந்த நிறுவனங்கள் தனித்து இயங்குவதில்லை. மாறாக ஊராட்சிகள், அங்கன் வாடிகள் மற்றும் பொது கல்வி அமைப்புகளுடன் ஒருங்கிணை ந்து செயல்படுகின்றன. இது நலன்புரியும் ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையையும் பிரதி பலிக்கிறது. வரலாற்று ரீதியாக எடுத்துக் கொண்டால் நிலச் சீர்திருத்தங் கள், பெண்கள் உயர் கல்வியறிவு, கல்வி மற்றும் பொது வழங்கலில் முதலீடுகள் இந்த சுகாதார உள்கட் டமைப்புக்கான சமூக அடித்த ளத்தை உருவாக்கியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் கேரளா இந்த மரபைத் தொடர்ந்து வளர்த்து கொண்டே புதிய பொது சுகாதார சவால்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதிலளிக்கிறது. சுகாதார பதிவுகளின் டிஜிட்டல் குறிப்பாக அமைச்சர் வீணா ஜார்ஜ் பதவிக் காலத்தில், சுகாதாரத் துறை பல பகுதிகளில் விரிவாக்கத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளது. இதன் விளை வாக மனநல சுகாதார உள்கட்ட மைப்பு, விபத்து பராமரிப்பு (trauma care), மாற்றுத்திற னாளிகள் மற்றும் அரிய நோய் களால் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கான ஆரம்ப தலையீடு, சுகாதார பதிவுகளின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான திறன் வளர்ச்சி ஆகியவை மிகப்பெரும் வளர்ச்சியை சந்தித்துள்ளன. மிக முக்கியமாக கொரோனா தொற்று நோய்க்கு கேரளா அமைத்த ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள், தினசரி பொதுத் தொடர்பு, அடித்தள சுகாதார பணியாளர்களின் பயன்பாடு மற்றும் அறிவியல் நிபுணத்து வத்தை நம்பியதற்காக சர்வதேச அளவில் பரவலாக கவனிக்கப் பட்டது. அதன்பின்னர் கொரோனா அலைகளில் சவால்கள் தீவிர மடைந்த போதிலும், கேரள மாநி லம் தேசிய சராசரியை விட அதிக அளவில் சோதனை மற்றும் மருத்து வமனை தயார் நிலையை பராமரித் தது. அதே போன்று 2018 மற்றும் 2021 நிபா வைரஸ் நோய்த் தொற்றுகளில், கேரள மாநிலம் கடைப்பிடித்த தடுப்பு நடவடிக்கை கள் மற்றும் துறை ஒருங்கி ணைப்பு முறைகள் இப்போது பிற பகுதிகளால் ஆய்வு செய்யப்படு கின்றன. கேரள மாநிலத்தின் முக்கிய முன்முயற்சியான ‘ஆர்த்ராம் மிஷன்’ (Aardram Mission) உள்கட்டமைப்பு நவீனமயமாக் கல், நோயாளி நட்பு நடைமுறை கள் மற்றும் அனுதாபத்துடன் கூடிய பராமரிப்பு உள்ளிட்ட பயிற்சி மூலம் பொது மருத்துவ மனைகளை மறுசீரமைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பல மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனை கள் குடும்ப சுகாதார மையங் களின் தரத்தை பூர்த்தி செய்ய மேம்படுத்தப்பட்டுள்ளன. இது ஒரே கூரையின் கீழ் பரந்த அள விலான சேவைகளை வழங்கு கிறது. இத்தகைய பிரம்மாண்ட கட்டமைப்புகளுடன் வளர்ந்து, தரமான சுகாதார சேவை வழங்கி வரும் கேரள அரசின் சுகாதாரத்து றையின் சேவையை அறிந்த ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில சட்டமன்றம் அமைச்சர் வீணா ஜார்ஜை சட்டமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைத்து, விருதை வழங்கியுள்ளது. முன்னதாக, அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது ஆஸ்திரேலிய பயணத்தின் போது விக்டோரியா முதலமைச்சர் ஜசிண்டா ஆலன், துணை முதலமைச்சர் பென் கரோல், சுகாதார அமைச்சர் மேரி ஆன் தாமஸ் உள்ளிட்ட மாநில உயரதிகாரிகளுடன் கலந்துரை யாடினார். இந்த சந்திப்புகளின் போது சுகாதார சேவைகள் மற்றும் ஆளுமைத்திறன் குறித்த அறிவு பரிமாற்றம் மற்றும் கூட்டு முயற்சிகள் குறித்து விவாதிக்கப் பட்டதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.