tamilnadu

img

பொதுக் கல்வித் துறையை வலுப்படுத்த கேரள அரசு நடவடிக்கை

கொச்சி: கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் மேலும் 43 பள்ளி கட்டிடங் கள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தெரி வித்தார். முதல்வர் அறிவித்த நூறு  நாள் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக  விரைவில் இக்கட்டிடங்கள் திறக்கப் படும் என கல்வித்துறை அமைச்சர் அறி வித்திருப்பது அரசின் உறுதியை காட்டு கிறது என்றும் கூறினார். ரூ.51 கோடியில் இந்த 43 பள்ளி கட்டி டங்கள் கட்டப்பட்டுள்ளன. கிப்ஃபி மற்றும் திட்டநிதி போன்றவற்றைப் பயன் படுத்தி பல கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. மேலும் எர்ணாகுளம் மாவட்டத் தில் உள்ள பள்ளிகள் உட்பட, மேலும்  11 பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்றும் அரசு அறிவித் துள்ளது. இதற்காக, 29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பள்ளிகள்  மூடப்படுவதற்கு முன்பே, பாடப்புத்த கம், சீருடைகள் மற்றும் 5 கிலோ அரிசி  ஆகியவற்றை ஒன்றாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. பினராயி விஜயன் அரசு பொதுக் கல்வித் துறையை வலுப் படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. முந்தைய பினராயி ஆட்சியிலும், தற்போதைய பினராயி ஆட்சியிலும் அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவ சேர்க்கை நடந்துள்ளது.

கடந்த ஆண்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுக் கல்வித்  துறையில் நுழைந்துள்ளனர். முந்தைய  பினராயி ஆட்சியில் 141 பள்ளிகள் சர்வ தேச தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டன.  4752 பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப  அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. 14,000  பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைய தள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார்  அரை லட்சம் வகுப்பறைகள் (45,000)  ஹைடெக்காக மாற்றப்பட்டுள்ளன. 11272 தொடக்கப் பள்ளிகளில் முதல் நிலை உயர் தொழில்நுட்ப ஆய்வகத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 1 முதல்  12 ஆம் வகுப்புகளுக்கு 1.19 லட்சம் மடிக்கணினிகள் மற்றும் சுமார் 70,000 புரொஜெக்டர்கள் வழங்கப்பட்டன. மகளிர் தினத்தை முன்னிட்டு டிஜிட்டல் பள்ளி திட்டத்தை தொடங்க  முடிவு செய்திருப்பது வரவேற்கக் தக்கது. பெருகி வரும் பல்வேறு டிஜிட் டல் தளங்களைப் பயன்படுத்த பெண் களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்க மாகக் கொண்ட இத்திட்டம் காலத்தின்  தேவை. ஸ்மார்ட் போன், சமூக ஊட கங்கள், நெட் பேங்கிங், ஆன்லைன் பேமெண்ட் சேவைகள், ஏடிஎம் மற்றும்  சைபர் பாதுகாப்பு பற்றிய விழிப்பு ணர்வு அவசியமான நடவடிக்கையா கும். வருவாய் சேவைகள் மற்றும் டிஜிட்டல் தளத்தை வழங்குவதற்காக வருவாய் மின்-கல்வி திட்டத்தை அர சாங்கம் அறிமுகப்படுத்துகிறது. டிஜிட் டல் நில அளவீடு தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கேரள எழுத்தறிவு  இயக்கமும் இதுபோன்ற பாடத்திட்டத்தை  மேற்கொள்வது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கேரளா நூறு சதவீத எழுத்தறிவு பெற்றா லும், டிஜிட்டல் கல்வியறிவு அடைந்து  விட்டது என்று சொல்ல முடியாது. எனவே, அனைத்து கேரள மக்களை யும் டிஜிட்டல் கல்வியறிவு பெற்றவர் களாக மாற்ற அரசு ஒரு புதுமையான திட்டத்தை கொண்டு வருவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எம்.வி. கோவிந்தன் குறிப்பிட்டார்.