சென்னை, செப்.9- தமிழ்நாடும் கேரள மும் நாட்டைக் காக்கும் முயற்சியில் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் போன்று செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவுக் கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். சென்னை மலையாளி கள் சங்கத்தின் சார்பில் கேரள மீடியா அகாடமியின் “மீடியா மீட் 2023” நிகழ்ச்சி சென்னையில் நடைபெற் றது. இதில் பிரபல பத்திரி கையாளர் பி.ஆர்.பி. பாஸ் கரன் எழுதிய ஆங்கில புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கேரள மாநில முன்னாள் கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்கள் துறை அமைச்சர் எம்.ஏ. பேபி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதா வது:- நாம் ஒரே மொழி குடும் பத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்த வர்கள். சமத்துவத்திற்கு எதிராக இருக்க கூடிய வர்களுக்கு இன்றைக்கு ‘திராவிடம்’ என்ற சொல் ஒரே எரிச்சலாக இருக்கி றது. ஊடகத் துறையில் தலித் பத்திரிகையாளர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருக்கிறது.
இது ஓரளவு உண்மைதான். இதனை உணர்ந்துதான் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இளைஞர்கள், அரசுப் பள்ளியில் படித்தவர்களில் இதழியல் ஆர்வம் கொண்ட வர்களுக்கு இலவசமாக இதழியல் பயிற்சி லயோலா கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு அரசு வழங்கியது. இந்தியாவின் பன்முக தன்மைக்கு இன்று ஆபத்து வந்திருக்கிறது. வேற்றுமை யில் ஒற்றுமை என்ற தத்துவத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது. மதச்சார் பின்மைக்கு ஆபத்து வந்திருக்கிறது. சமூக நீதியை சிதைக்கப் பார்க் கிறார்கள். இவை அனைத் தையும் சிதைப்பதன் மூலம் இந்தியாவை சிதைக்க பார்க்கிறார்கள். இதனை அரசியல் தளத்தில் அரசி யல் இயக்கங்கள் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்தியாவைக் காப்பாற் றும் பணியில் ஊடகங்கள் தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும். இங்கு கூடியிருக்கும் எனது மலை யாள சொந்தங்களுக்கும் கேரளத்தில் வாழக்கூடிய சொந்தங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது, தமிழ்நாடும் கேரளமும் நாட்டைக் காக்கும் முயற்சி யில் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவுக்கு விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும். அதேபோல் ஊடகங்களும், பொய் பரப்பு ரைகள், திசை திருப்புப வர்களுக்கும் முக்கியத்து வம் தராமல் விடுதலைப் போராட்டக் காலத்தில் செயல்பட்டதைப் போல மீண்டும் செயல்பட வேண்டும் என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் நூலாசிரியர் பாஸ்கர், சட்ட மன்ற உறுப்பினர் பரந்தா மன், ஏசியா நெட் குழுமத்தின் நிறுவனர் சசிகுமார்.