tamilnadu

img

கேரளம் சிவப்பான வரலாறு - எஸ்.ஏ.மாணிக்கம், சி.முருகேசன்

கேரள மாநிலம் கண்ணூர் நகரில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாடு கடந்த 6ஆம் தேதி துவங்கி வருகின்ற 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநாட்டையொட்டி கண்ணூர் போலீஸ் மைதானத்தில் வரலாற்று கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மார்க் சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக வும் அகில இந்திய விவசாய சங்கத்தின் பொதுச் செய லாளராகவும் செயலாற்றி மறைந்த தோழர் கே.வரதராசன்  பெயர் வரலாற்று கண்கட்சிக்கு சூட்டப்பட்டிருந்தது, பொதுவாக கட்சி மாநாடுகளில் நடைபெறும் வரலாற்றுக் கண்காட்சி தானே என்கிற வழக்கமான உணர்வில் கண்காட்சியை பார்வையிடச் சென்றோம் ஆனால் அது உண்மையில் வரலாற்றோடு நம்மை பயணிக்க வைத்தது. கண்காட்சி வரலாறாக போதித்து அனுப்பியது. கண்காட்சியின் நுழைவாயிலில் கேரள மக்களின் பாசத்துக்குரிய தலைவர் ஏ.கே.ஜி என்கிற ஏ.கே.கோபாலன் அவர்களின் பிரம்மாண்டமான உருவச்சிலை நம்மை வரவேற்றது. குடும்பத்தினரோடு வந்திருந்த பெரியவர்கள் இது நம்ம ஏகேஜி என்று உரிமையோடு அவர்களின் இளம் தலைமுறைக்கு காட்டி மகிழ்ந்தார்கள். 

மார்க்சும் ஏங்கெல்சும் உலக மக்களுக்காக அர்ப் பணித்த கம்யூனிஸ்டு அறிக்கை துவங்கி பாரிஸ் கம்யூன்,  ரஷ்யப் புரட்சி, வெனிசுலாவின் போராட்டம் வரைக்கு மான உலக புரட்சி வரலாறுகளை கண்முன் நிறுத்துகிறது. சுருக்கமாக புரிந்து கொள்ளும் வகையில் உலகப் புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றுடன் கண்காட்சி துவங்குகிறது மாமேதை லெனின் துவங்கி மாவோ, பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, வெனிசுலாவின் சாவேஸ் வரை யில் புரட்சிக்கு தலைமையேற்றவர்களையும் கண்முன் நிறுத்துகிறது.  இந்திய மண்ணில் மார்க்சியம் அறிமுகமாவதுடன் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு துவங்குகிறது. 1881ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்த பாலகங்காதர திலகரின் மராத்திய பத்திரிகையில் கார்ல் மார்க்ஸ் ஒரு  நவீன வாதி என்ற தலைப்பிட்டு கட்டுரை வெளிவந்துள் ளதை பத்திரிகையின் புகைப்பட ஆதாரம் எடுத்துக் காட்டு கிறது, மும்பையில் 1908 ஜனவரியில் 6 நாட்கள் பாலகங்கா தர திலகரின் தலைமையில் நடைபெறற வேலைநிறுத்தப் போராட்டத்தில் போலிஸ் அடக்குமுறையில் 200க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்த தகவலையம் அறிய முடிகிறது. ஏகாதிபத்திய ஆட்சியாளர்களை எதிர்த்து நடை பெற்ற விவசாயிகளின் எழுச்சிமிகு போராட்டங்களான சந்தால் போராட்டம், மேற்குவங்க சணல் தொழிலா ளர்கள் போராட்டம், 1857 முதல் இந்திய சுதந்திரப் போர் சிப்பாய் கலகம் உள்ளிட்டவை உரிய தகவல்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  தேசத்தின் சுதந்திரத்திற்கான போராட்ட வரலாற்றை யும், அதைத்தொடர்ந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றையம் பதிவுகளுடன் காட்சிப்படுத்துகிறது, பெசாவர் மீரத், கான்பூர் சதிவழக்குகளின் விபரங்களை தெரிவிக்கின்றது.

கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான வீரஞ்செறிந்த போராட்டங்களை வரிசைப்படுத்தி சுதரந்திரத்திற்கான போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்களிப்பினை இளம் தலைமுறைக்கு எடுத்துரைத்தது. தேச விடுதலைக்காகவும் நிலப்பிரபுக்களின் கொடு மையான சுரண்டலை எதிர்த்தும் நடைபெற்ற புகழ்பெற்ற  போராட்டங்களை காண முடிகிறது, கப்பற்படை எழுச்சி. தெலுங்கானா போராட்டம், வார்லி விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவகளை மையப்படுத்திய வரலாற்று படக்காட்சி இடம் பெற்றிருந்தது.  கேரள மண்ணில் மார்க்சியம் தடம் பதித்து இடது  முன்னணி வரையிலான வெற்றிகரமான ஒரு வரலாற்று நெடும் பயணத்தின் எடுத்துரைக்கிறது. குறிப்பாக 1939 டிசம்பரில் கேரளாவில் துவக்கப்பட்ட கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை அமைப்பு துவங்கி இடது முன்னணி தன்னுடைய புரட்சிகர வரலாற்று வழித் தடத்தை பதிவு செய்துள்ளது காலனி ஆதிக்கத்தை எதிர்த்து, ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கேரளாவில் நிலவிவந்த மோசமான நிலப்பிரபுத்துவக் கொடுமைகளை எதிர்த்து சமஸ்தான மன்னர்கள் ஆதிக்க  அதிகாரத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான மக்கள் போராட்டங்கள் வரிசையாகக் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. மாபெரும் தியாகப் போராட்டங் களை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில் தனது நெஞ்சில் இருந்து நீங்காத வண்ணம் சிற்பம் ஓவியங்களாக அது வடிவமைக்கப்பட்டிருந்தது 

‘1939 கண்ணூர் பினராயி கிராமத்தில் துவககிய முதல் கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை அமைப்புக்  கூட்டம் வெகு துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பி,கிருஷ்ணபிள்ளை, இஎம்எஸ், ஏகேஜி உளிளிட்டோரின் உருவ வடிவமைப்பு மிகச்சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது. அதேபோல தெலுங்கானா விவசாயிகள் போராட்டம், கையூர் தியாகிகளின் தூக்குமேடைக் காட்சி, வெண்மணி தியாகிகள், 1946 இரயில்வே சரக்கு பெட்டியில் மாப்ளா போராட்டக்காரர்களை அடைத்து படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்டு தியாக வரலாறுகள் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் அழகுடனும், நவீனக் காட்சியமைப்புகளுடன் வைக்கப்பட்டிருந்தது. கேரள கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய மாபெரும்  போராட்டங்களின் மக்கள் இயக்கங்களின் ஆவ ணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.  கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தாண்டி கேரள சமூக சீர்திருத்தத்திற்கு போராடிய குரல் கொடுத்த போராளிகளையும் அறிமுகப்படுத்தியது. சமூக சீர்த்திருத்தவாதிகளான நாராயணகுரு, அய்யங்காளி, சட்டம்பிசுவாமிகள், அய்யா வைகுண்டசாமி, வைக்கம்  மௌலவி. கி சாவரா பிரியாகோஸ். எலியாஸ் அச்சன் உள்ளிட்டோரின் சமூக சீர்திருத்த கருத்துக்களுடன் அவர்களை அறிமுகப்படுத்தியது. குறிப்பாக நாராயண குரு, அய்யங்காளி ஆகியோரின் முழுஉருவ சிலை நம்மை ஈர்க்கிறது,

இவர்களோடு பெண் விடுதலைக்கான போராட்டத் தில் முன் நின்ற போராளிகளையும் வரலாற்று படக்காட்சி  அறிமுகப்படுத்தியது. பிரான்சின் புனிதர் ஜோன் ஆப் ஆர்க். பிலிப்பைன்ஸின் மரியா ஜோசப் காப்ரின், மேற்கு ஆப்பிரிக்காவின் : நானரூபா, ஜெர்மனின் ரோசா லக்சம்பர்க். ரஷ்யாவின் குருப்ஸ்கயா. கியூபா பிடல் காஸ்ட்ரோவின் சக தோழரான செலியா சான்செஸ் உள்ளிட்ட பெண் போராளிகளின் சுருக்கமான வரலாறு காண முடிந்தது. இந்தியாவில் பெண் விடுதலைக்காக தேச சுதந்திரத்திற்காக போராடிய முதல் முஸ்லீம் போராளி அபடி பைனோ பேகம், சிட்டகாங் வீரங்கனை பிரித்தி லதா, கல்பனாதத், கேப்டன் லட்சுமி, கோதா வரி பருலேகர், தெலுங்கானா மல்லு சுவராஜ்யம், கவுரியம்மா, சுசிலா கோபலன் உள்ளிட்ட இந்திய பெண் போராளிகளை அறிமுகப்படுத்தியது.  கேரள மண்ணில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்ப்ப தற்காக இன்னுயிர் ஈந்த தியாகிகளின் வரலாறுகளையும், வீரமிக்க போராட்டங்களையும் வரலாற்றுக் கண்காட்சி மிக அற்புதமாக காட்சிப்படுத்தியிருந்தது. கேரள சமூகத்தின் முன்னேற்றத்திற்காக கம்யூனிஸ்ட்  இயக்கம் நடத்திய சமூக விடுதலைக்கான போராட்டம்,  நிலபுரபுத்துவக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள், இடதுமுன்னணி அரசுகள் தொடர்ந்து எடுத்துவந்த மக்கள் நல திட்டங்கள், மக்களை ஜனநாயக நீரோட்டத்திற்குள் ஈர்த்து முற்போக்கு இடதுசாரி அரசியலுக்கு அடித்தளமிட்ட அந்த வரலாற்று பயணம் தான் கேரளத்தை சிவப்பாகி வைத்துள்ளது, இது நிறம் மாறாத சிவப்பு ரோஜா.