tamilnadu

img

பல தலைமுறைகளாக வசித்துவரும் கடியாபட்டி மக்களுக்கு குடிமனைப்பட்டா பெற்றுத்தந்தார் எம்.சின்னத்துரை எம்எல்ஏ.,

புதுக்கோட்டை, ஜன.15- பல தலைமுறைகளாக குடி யிருந்துவரும் மக்களுக்கு இதுநாள் வரை பட்டா கிடைக்காத நிலையில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னத் துரையின் முயற்சியால் சுமார் 300 குடும்பங்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் அண்டக்குளம் வரு வாய் கிராமத்திற்கு உட்பட்டது கடி யாபட்டி கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலை முறைகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமானதாக இருந்தது. இதுதொடர்பாக நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட தைத் தொடர்ந்து மேற்படி மக்கள் வசிக்கும் பகுதியை வனத்தில் இருந்து நீக்கி கடந்த 31.05.1988-இல்  நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட் டது. மேற்படி கடியாபட்டியில் வசிக் கும் மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள் ளது. ஆனாலும், இதுநாள் வரை மேற்படி பகுதியில் வசிக்கும் மக்க ளுக்கு குடிமனைப் பட்டா கிடைக்க வில்லை. இந்நிலையில், கடந்த சட்ட மன்றத் தேர்தலில் கந்தர்வகோட்டை தொகுதி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை போட்டி யிட்டார். அவரிடம், வெற்றிபெற்ற தும் குடிமனைப் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த னர். நிச்சயம் கோரிக்கையை நிறை வேற்றித் தருவதாகவும் எம்.சின்னத் துரை வாக்குறுதி அளித்தார். தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத் துரை மேற்படி கடியாபட்டி மக்க ளுக்கு பட்டா கிடைக்கும் நடவடிக்கை களை தீவிரமாக மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து கடியாபட்டி மக்களுக்கு குடி மனை பட்டா கிடைக்க வருவாய்த்துறையினர் முன் வந்தனர்.

இந்நிலையில், கடந்த புதன் கிழமை அன்று சட்டமன்ற உறுப்பி னர் எம். சின்னத்துரை,  வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, வட்டாட்சியர் பெரியநாயகி, வரு வாய் ஆய்வாளர் தவமணி, கிராம நிர்வாக அலுவலர் முத்துப்பாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஏ. ஸ்ரீதர், சு.மதியழகன், ஒன்றிய செயலாளர் எஸ். கலைச்செல் வன், ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா வீரமணி, துணைத்தலைவர் சுகாஷினி சங்கர் உள்ளிட்டோர் கடியாபட்டி கிராமத்திற்கு வந்து அப் பகுதி மக்களை சந்தித்தனர்.  அப்போது ஜனவரி மாத இறு திக்குள் உரிய அளவீடு செய்து அப்பகுதியில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் குடிமனைப் பட்டா வழங்கப்படும் என்று சட்ட மன்ற உறுப்பினர் முன்னிலையில் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உறுதியளித்தனர். 

சிபிஎம் நீண்ட போராட்டம்

இதுகுறித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, கடியா பட்டி பகுதி மக்களுக்கு பட்டா கிடைக்க வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக போராடி வந்துள்ளது. ஒருகட்டத் தில் இப்பகுதியில் உள்ள குடி யிருப்புகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் காவல் துறையினரின் உதவி யோடு வனத்துறையினர் வீடுகளை இடித்து அகற்றும் நடவடிக்கையில்  தீவிர முயற்சி மேற்கொண்டனர்.  வனத்துறையினரின் மேற்படி நட வடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாக களத் தில் நின்று வீரஞ்செறிந்த போராட் டத்தை நடத்தியது. இதனைத் தொட ர்ந்து குடியிருப்புகளை இடிக்கும் முயற்சி அப்போது கைவிடப்பட் டது. மேற்படி போராட்டங்களில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர்கள் கிள்ளுக்கோட்டை கே. ஆரோக்கியசாமி, முன்னாள் பேரூ ராட்சி மன்றத் தலைவர் அ.புஷ்பம், அண்டக்குளம் சி சுப்பிரமணியன், தற்போதும் வாழும் தலைவர்கள் பி.மருதப்பா, கே. தங்கவேல், எஸ். பீமராஜ் உள்ளிட்ட தோழர்களின் பங்கு மகத்தானது. 

போராட்டம் நடத்திய கட்சிக்கே இத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இன்றைக்கு இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. கந்தர்வ கோட்டை தொகுதியில் இன்னும் ஏரா ளமான குடும்பங்களுக்கு குடி மனைப்பட்டா இல்லாத நிலை உள்ளது. படிப்படியாக அவர்களுக் கும் மனைப்பட்டா கிடைக்கும் நட வடிக்கைகளில் சட்டமன்றத்தின் வாயிலாகவும், மக்கள் மன்றத்தின் வாயிலாகவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து  பணியாற் றும். இவ்வாறு எம்.சின்னத்துரை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.