tamilnadu

காசி கைது வழக்கு  தமிழக அரசு மனுதாக்கல் செய்ய உத்தரவு

மதுரை, ஜூன் 10- கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோயிலை சேர்ந்த தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு வில், எனது மகன் காசி மீது கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி பெண்கள் மீதான வன் கொடுமை, சைபர் கிரைம் உள்ளிட்ட வழக்குகளில் கீழ் கோட்டார் காவல்நிலை யத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றதில் ஆஜர்படுத் தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து காசி மீது கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி குமரி மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். காசி மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யான வழக்குகள். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. காசி மீது வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை. மேலும் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யாத நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப் படுவது சட்ட விதிகளை மீறும் செயலா கும். எனவே காசி யை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிர காஷ், புகழேந்தி அமர்வில் புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதி லளிக்க உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.