tamilnadu

img

கருகும் பயிர்கள் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா - டெல்டாவில் விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர், அக்.11 - காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடக அரசு காவிரியிலிருந்து தமிழ கத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை  கொடுக்காததால், டெல்டா மாவட்டங்க ளில் குறுவை நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்யப்பட்ட பயிர்கள் இரண்டு லட்சம்  ஏக்கர் வரை காய்ந்து கருகி விட்டன.  எஞ்சிய குறுவைப் பயிரை பாதுகாத்தி டவும், சம்பா சாகுபடி பணிகளை தொடங்கிடவும் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய காவிரி நீரை  வழங்க வேண்டும். ஒன்றிய அரசு இதில்  உடனடியாக தலையிட வேண்டும் என  வலியுறுத்தி, காவிரி படுகை பாதுகாப்பு  கூட்டியக்கம் சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவா ரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கட லூர்,

அரியலூர் ஆகிய மாவட்டங்களில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆதரவுடன் புதன்கிழமை முழு அடைப்பு மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம், சாலை மறி யல் நடைபெற்றன.  முழு அடைப்பு காரணமாக, டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான கடை கள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துக ளில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. சில இடங்களில் மறியலும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்தப்  போராட்டங்களில் பல்லாயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர். ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்த மாபெரும் போராட்டத்தில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம், திமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக, திரா விடர் கழகம், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம்  லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, விவசாயி கள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், சிஐடியு, வர்த்தகர்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைச் செயலா ளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு  கலைக் கல்லூரி, பேராவூரணி ரயில் நிலையம், பட்டுக்கோட்டை, மதுக்கூர் தபால் நிலையங்கள், ஒரத்தநாடு பாரத ஸ்டேட் வங்கி, பூதலூர், திருக்காட்டுப் பள்ளி, திருவையாறு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவையாறில் நடந்த போராட் டத்திற்கு, விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கே. பக்கிரிசாமி தலைமை வகித்தார்.

கும்பகோணம்

கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத் தில் திமுக நகரச் செயலாளர் தமிழழகன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாநகரச் செயலாளர் செந்தில் குமார், மாமன்ற உறுப்பினர் செல்வம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருபுவனம், திருவிடைமருதூர், திருப்ப னந்தாள், சுவாமிமலை, நாச்சியார்கோ வில் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம்  நடைபெற்றது.

திருவாரூர் 

குடவாசல் தபால் நிலையத்தில் நடை பெற்ற போராட்டத்தில் சிபிஎம் மாவட்டச்  செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, கொரடாச் சேரியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, நன்னிலத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம், மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது உது மான், வலங்கைமானில் சிபிஎம் ஒன்றியச்  செயலாளர் என்.ராதா ஆகியோர் பங்கேற் றனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பிறகு பி.எஸ்.ஆர்.  மணிமண்டபத்தில் இருந்து பேரணி யாக புறப்பட்டு, நகரத்தின் முக்கிய சாலை  வழியாக சென்று தலைமை தபால் நிலை யம் முன்பு பேரணி நிறைவடைந்தது. இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்  ஐ.வி.நாகராஜன், சிபிஐ தேசிய கட்டுப் பாட்டு குழு உறுப்பினர் கோ.பழனிச் சாமி, திமுக நகரச் செயலாளர் ஆர்.எஸ். பாண்டியன், ஒன்றியச் செயலாளர் பிரகாஷ்  ஆகியோர் தலைமை வகித்தனர். 

மன்னார்குடி 

மன்னார்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு காவிரி படுகை பாது காப்பு கூட்டியக்கம் மற்றும் மதச்சார் பற்ற கூட்டணி தலைவர்களில் ஒருவ ரான வை.செல்வராஜ் தலைமை வகித்தார். காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்க தலைவர் ஏ.கே.எஸ்.விஜயன்,  மன்னார்குடி நகர்மன்ற தலைவர் த. சோழராஜன் உள்ளிட்ட பலர் பேசினர். 

நாகப்பட்டினம்

திருக்குவளை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் விவசா யிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர்  வி.சுப்ரமணியன், கீழையூர் மேற்கு  ஒன்றியச் செயலாளர் டி.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கீழ்வே ளூர், தலைஞாயிறு, திருப்பூண்டி, திரு மருகல் ஆகிய இடங்களிலும் போராட்டம்  நடைபெற்றது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை தலைமை அஞ்சல கம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர் தலிங்கம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரை ராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் உட்பட பலர் உரையாற்றினர்.

திருச்சிராப்பள்ளி

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் நடந்த போராட்டத்திற்கு ஐக்கிய  விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப் பாளர் அயிலை.சிவசூரியன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர்  ராஜா, புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். போராட்டத்தில் மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் கவிதைப்பித்தன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், விவசாயத் தொழிலாளர் சங்க  மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.  அறந்தாங்கி, நாகுடி, சுப்பிரமணிய புரம், மேற்பனைக்காடு, நெடுவாசல், கீரமங்கலம், கறம்பக்குடி உள்ளிட்ட பகுதி களில் விவசாயிகள் கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை வெளிப் படுத்தினர். அண்ணா சிலை அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது.