tamilnadu

img

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கோரிக்கை மாநாடு

விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு காரணமான ஒன்றிய மோடி அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்தியும், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்தும் செப்டம்பர் 1 முதல் 3 நாட்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 200 கிலோ மீட்டர் நடைபயண பிரச்சாரத்தை நடத்தியது. நிறைவாக, நாகர்கோவிலில் ஞாயிறன்று மாலை நடைபெற்ற குமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கை மாநாட்டில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். மேடையில் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச்  செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் உள்ளிட்டோர்.