tamilnadu

img

சந்திரா செல்விக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கிடுக!

தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக தனது உயிரையும் பணயம் வைத்து வெட்டுக்காயங்களுடன் தனது அண்ணன் உயிரைக் காப்பாற்றிய நாங்குநேரி பள்ளி மாணவி சந்திரா செல்விக்கு “வீர தீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது” வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அவர் அனுப்பிய கடிதம் வருமாறு:

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பட்டியலின மாணவன் சின்னதுரையையும், அவரது தங்கை சந்திரா செல்வி யையும் சாதி ஆதிக்க மனோபாவம் கொண்ட சக மாணவர்கள் அரி வாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்  சம்பவம் நிகழ்ந்ததை அறிந்த வுடன் படுகாயமுற்ற மாணவர் சின்னதுரைக்கும், மாணவி சந்திரா  செல்விக்கும் உயர்தர சிகிச்சை யளிப்பதற்கு தாங்கள் உத்தரவிட்டு மருத்துவர் குழு சிறப்பான சிகிச்  சையை மேற்கொண்டு வருகிறது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும், பள்ளி மாணவர்கள் மத்தியில் தீண்டாமைக் கொடு மையை அகற்றுவதற்கும், சமத்து வம், சகோதரத்துவம் தழைத்தோங்  குவதற்கும் ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு நபர்  ஆணையம் அமைத்து தகுந்த பரிந்துரைகளை வழங்குவதற்கு தாங்கள் உத்தரவிட்டதும் வர வேற்கத்தக்கது.

இது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் போது உயிருக்கு பயந்து  அஞ்சி ஓடிவிடாமல் உறுதியாக நின்று அரிவாள் வெட்டை கையில் தாங்கி தனது சகோதரனது உயி ரைக் காப்பாற்றிய சந்திரா செல்வி யின் துணிச்சல் மிக்க நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது, பெரு மைக்குரியது. இவரது உறுதியான நடவடிக்கையின் மூலமே ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இவரது செயல் மற்றவர்களுக்கு முன்னதாரணமானது என்பதில் ஐயமில்லை. எனவே தமிழ்நாடு முதல மைச்சர், தனது உயிரையும் பண யம் வைத்து சாதி ஆதிக்க மனோ பாவம் கொண்ட சக மாண வர்களை எதிர்த்து போராடி தனது அண்ணன் உயிரைக் காப்பாற்றிய பள்ளி மாணவி சந்திரா செல் விக்கு, தமிழக அரசின் “வீர தீர  சாகச செயல்களுக்கான கல்பனா  சாவ்லா விருது” வழங்கிடுவதற்கு பரிந்துரை செய்யுமாறு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்  பில் கேட்டுக் கொள்கிறேன். மேலும், கொடும் தாக்குத லுக்கு உள்ளாகியுள்ள மாணவன் சின்னதுரை மற்றும் அவரது சகோ தரி சந்திரா செல்வி ஆகியோரின் கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்று இவர் களின் எதிர்கால வாழ்வை பாது காத்திட வேண்டும். அவர்களது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.