tamilnadu

img

கோவிலுக்குள் தலித்துகளை அனுமதிக்க மறுப்பது இன்னமும் தொடரலாமா?

 சென்னை, ஜூன் 10- கோவில்களுக்குள் தலித்துகளை அனுமதிக்க  மறுக்கும் செயல் இன்ன மும் தொடரலாமா? என்று  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். விழுப்புரம் மேல்பாதி திரவுபதி அம்மன் கோயில் உட்பட இந்து சமய  அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள  கோவில்களில் அனைத்து சமூகத்தினரும் சென்று  வழிபடும் உரிமையை நிலைநாட்டக் கோரியும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விசிக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வெள்ளியன்று (ஜூன் 9) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கே.பாலகிருஷ்ணன் பேசு கையில், அரசியலமைப்பு சட்டம்  தருகின்ற அடிப்படை உரிமையை ஒரு  சமூகம் ஏற்க மறுக்கிறது என்றால் அதை எப்படி நாம் ஏற்றுக் கொள்ள முடி யும்? பாதிக்கப்பட்டவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்கிறார்கள் என்றால் காவல்துறையினருக்கு எந்த மாதிரியான மனநிலை இருக்கிறது? இந்த சம்பவத்தில் காவல்துறையினர் பின்பற்றியது சமத்துவம் அல்ல என்றார். தமிழகத்தில் உள்ள கோவில்க ளில் தலித் மக்களை அனுமதிக்க மறுக்கும் போக்கு தொடர்ந்தால் நேரடியாக களத்தில் இறங்கி தலித்  மக்களை கோவில்களுக்குள் அழைத்து செல்வோம் என்றும் அவர் கூறினார்.   கோவில் கருவறைக்குள்ளேயே செல்லும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை வரவேற்கும் பாமக தலித் மக்களை கோவிலுக்குள் வழிபட அனுமதிக்க மாட்டோம் என்பது என்ன நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார்.

அதிகாரிகளால் கோவிலுக்கு சீல்  வைத்து இழுத்து மூட முடியும் என்றால்,  கோவிலுக்குள் தலித் மக்களை அழைத்துச் செல்ல முடியாதா? கோவிலை சீல் வைத்து பூட்டி விட்டால், அது பிரச்சனைக்கு முழுமையான தீர்வாகுமா? தமிழ்நாடு அரசு இந்த பிரச்சனையில் அழுத்தம் காட்ட வேண்டும்.  கிராமங்களில் சாதிக்கு ஒரு சுடுகாடு  என்று இருப்பதே தீண்டாமை தான். செத்த பிறகும் சமத்துவத்தை ஏற்றுக் கொள்ள முடியாத சூழல் நாட்டில் நிலை கொண்டுள்ளது. கோவில் களுக்குள் தலித்துகளை அனு மதிக்க மாட்டோம் என்ற இந்த அநியா யத்திற்கு இப்போதாவது அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். கோவில் நிலங்களை மீட்டு நிலம்  இல்லா ஏழைகளுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கையை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும். கோவில்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை, தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் வழிபடட்டும். ஆனால்  அங்கு நடைபெறும் அநீதிகள் களையப் பட வேண்டும். கோவில்களுக்குள் நுழைய தடை, தனி சுடுகாடு, சுடுகாடுகளுக்கு செல்ல பாதை இல்லை என்ற அவலங்களை அனை வரும் ஒன்றிணைந்து களைவோம். அதற்கான தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறினார். இதில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா ளர் மு.வீரபாண்டியன், செந்தில் செல்வன் (மதிமுக), விடுதலை ராஜேந் திரன், மருதையன் (பொதுவுடை மைக் கருத்தியலாளர்), விசிக  பொதுச்செயலாளர்கள் ம.சிந்தனைச் செல்வன், துரை.ரவிக்குமார் ஆகியோ ரும் பேசினர்.

காவல்துறை நேர்மையாக செயல்படவில்லை: தொல்.திருமாவளவன் எம்.பி.,

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், திரவுபதி அம்மன் கோவிலுக்குள் நுழைய வேண்டாம் என ஆதிதிராவிட மாணவர்களை சக மாணவர்கள் தாக்கி இருக்கிறார்கள். மேல்பாதியில் இளைய தலை முறையினரிடம் சாதிவெறி தூண்டி விடப்பட்டிருக்கிறது. சட்டம் வலியவனுக்கு  வளைந்து கொடுக்கிறது, எளியவனை எட்டி உதைக்கிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குள் நுழைய தலித்து களுக்கு உரிமை இல்லையா?  அதிகாரிகள் நேர்மையாக செயல்பட்டிருந்தால் தாக்கியவர்களை கைது செய்திருக்க வேண்டும். காவல்துறையினரிடையே தலித் விரோத போக்கு நிலவுகிறது. ஓபிசி மக்களை தவறாக வழிநடத்தக்கூடிய தலைவர்கள் இருக்கிறார்கள். மேல்பாதி சம்பவத்திற்கு சம்பந்தமில்லாமல் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த வர்கள் தாக்கப்படுகிறார்கள். தாக்குதலுக்கு உள்ளானவர்கள்  மீதே வழக்கு பதிவு  செய்து கைது செய்யப்படுகிறார்கள். இந்தியா முழுவதும் இந்த நிலைதான்.

தீண்டாமையை எதிர்ப்பவர்கள் ஆளும் தமிழ்நாட்டிலேயே காவல்துறையினர் இப்படி செயல்படுகிறார்கள் என்றால் சாதி தீண்டாமை புத்தியைக் கொண்ட பாஜக ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என்று எண்ணிப்  பாருங்கள். இந்துக்கள் என்ற போர்வையை சாதி அரசியலுக்காக பாஜக பயன்படுத்துகிறது. வன்னியர்களுக்கு யார் எதிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியா? பாரதிய ஜனதா கட்சியா? வன்னியர்களுக்கு எதிரி தலித் இயக்க ங்களா அல்லது ஆர்எஸ்எஸ் சங்கிகளா என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அனைத்து சாதியினரும் செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதனை தடுப்பவர்கள் மீது சட்டப்படி  நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் அறங்காவலர் குழுவில் ஆதிதிராவிடர் ஒருவரையும், பெண் ஒருவரையும் அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும். எந்தவித பாகுபாடும் இன்றி பிரசாதங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதனை மீறி செயல்படும் பூசாரிகள் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவில் பூசாரிகளின் நலனுக்காக நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளும் ஓய்வூதியம் பெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமென்று திருமாவளவன் கேட்டுக் கொண்டார்.