கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நலம் சிறப்பு செயலாக்கத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தனியார் அமைப்பான திருப்புமுனை ஆகியவை இணைந்து நடத்திய சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தினை கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு வியாழக்கிழமை (ஜூன் 26) அன்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டவர்கள் என பலதரப்பினர் பங்கேற்றனர்.