tamilnadu

img

ஆர்எஸ்எஸ் பதற்றத்தை தூண்டும் அபாயம்

திருநெல்வேலி, ஏப்.11- உச்சநீதிமன்ற அனுமதியை கொண்டு தமிழ்நாட்டில் மதப் பதற்றத்தை ஆர்எஸ்எஸ் தூண்டிவிடும் அபாயம் உள்ளது என கே.பாலகிருஷ்ணன் கூறினார். திருநெல்வேலியில் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்  துக்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்திருப் பது கவலையளிக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்  புக்கு ஒரே நேரத்தில் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியிருப்பது வருந்தத் தக்கது. ஆர்எஸ்எஸ் ஊர்வலங்களால் ஏற்  படும் பதற்றமான சூழலை சமாளிக்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது அவசியம்.  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சையை உருவாக்கி வருகிறார். ஆளு நருக்கு எதிராக சட்டப்பேரவையில் திங்கட்  கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து வேறுவழியில்லாமல் இணைய வழி சூதாட்ட தடை மசோதாவுக்கு  ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவுக்கு கடந்த ஜனவரியிலேயே ஒப்புதல் வழங்கி யிருந்தால், 50 பேர் வரை உயிரிழந்திருக்க மாட்டார்கள். பலர் சொத்துகளை இழந்திருக்க மாட்டார்கள்.  சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக  தீர்மானம் கொண்டு வந்தபோது, வேறு சில  பிரச்சனைகளை காரணம் காட்டி எடப்பாடி  கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக வினர் வெளிநடப்பு செய்துவிட்டனர்.  அதே நேரத்தில் பாஜக எம்எல்ஏக்கள் ஆகியோர்  தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளி யேறிவிட்டனர். இவர்கள் மாநில உரிமையைப் பற்றியோ, மக்களின் பிரச்சனைகளைப் பற்றியோ கவலைப்படவில்லை.

பல்வீர் சிங்கின் கொடிய செயல்

அம்பாசமுத்திரம் சரகத்தில் பல் பிடுங்கப் பட்ட விவகாரம் வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. மனித உரிமைகளுக்கு பாது காப்பு அளிக்க வேண்டும் என பேசிக் கொண்டி ருக்கக் கூடிய இந்த நேரத்தில் இதுபோன்ற  சம்பவம் நடந்திருக்கிறது. பல்வீர் சிங்  உள்ளிட்டோர் மீது உடனடியாக வழக்குப் பதிவு  செய்ய வேண்டும். 

ஒரே கிராமத்தில் 24 கல் குவாரிகள்

நெல்லை  மாவட்டம், அடைமிதிப்பான் குளம் கல் குவாரியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த  விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இருவர் காய மடைந்தனர். இந்த விபத்துக்கு விதிமீறலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததுமே கார ணம். ஆனால், இப்போது அனைத்து குவாரி களும் பழைய மாதிரி செயல்படுகிறது. ஒரே  கிராமத்தில் 24 கல் குவாரிகள் செயல்படு கின்றன. கனிம கொள்ளை நடைபெற்று வரு கிறது. ஒரு ஏக்கருக்கு அனுமதி வாங்கிவிட்டு  5 ஏக்கர்களில் கற்கள் வெட்டி எடுக்கப்படு கின்றன. கனிம கொள்ளையை அரசு கட்டுப்  படுத்த வேண்டும். கல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தினால் அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். நெல்லை  மாவட்டம், மானூரில் அரசு கலைக்கல்லூரி கட்டுமானப் பணியானது சில ருடைய தலையீட்டால் பாதியிலேயே நிறுத்  தப்பட்டுள்ளது. இப்போது வேறு இடத்தில் கட்ட முயற்சிக்கிறார்கள். இதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதே இடத்திலேயே கல்  லூரியை கட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  பேட்டியின் போது மார்ச்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மோகன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.எம்.முருகன், பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர். (ந.நி)