தொந்தரவு இருக்காது: அமைச்சர் உறுதி
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை தலைமை செயலகத்தில் சந்தித்து கே.பாலகிருஷ்ணன் மனு அளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில் நில விவகாரம் குறித்து அறநிலையத்துறை அமைச்சரை சந்தித்து பேசினோம். வாடகை பாக்கி என்ற வகையில் நோட்டீஸ் கொடுத்து காலி செய்யும் நடவடிக்கை இனி இருக்காது. நியாயமான வாடகை நிர்ணயிப்பது குறித்து ஒருவாரத்தில் முடிவெடுப்போம். அதுதொடர்பான குழு மார்க்சிஸ்ட் கட்சியையும் சந்தித்து பேசும். அதன்பிறகு மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் நியாயமான தொகையை வாடகையாக நிர்ணயிப்போம். அது மக்களுக்கு சுமையாக இருக்காது; கோவில் நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு இனி எந்த தொந்தரவும் இருக்காது என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார் என்றார்.
சென்னை, மே 6 - ஏழைகளுக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதி என்பது அநீதியானது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சாடினார். அனைத்துவகை அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு நிலவகை மாற்றம் செய்து குடிமனைப் பட்டா வழங்க வேண்டும், சமய நிலங்களில் குடியிருப்போருக்கு, இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 34ன்படி குடிமனைப்பட்டா வழங்க வேண்டும், ரயில்வே காலி நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு குடியிருப்பு களை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவு என்ற பெயரால் ஏழை மக்களை நகரத்தை விட்டு வெளியேற்றக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (மே 6) தமிழகம் முழு வதும் ஆட்சியர், கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தப் போராட்டத்தில் தமி ழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதன் ஒருபகுதியாக சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: ஒரே இடத்தில் தலைமுறை தலை முறையாக வசிப்போரை ஆக்கிர மிப்பாளர்கள் என்று எப்படி கூற முடியும்? நீர்நிலைப் பகுதி என குடி யிருப்புகள் அகற்றப்பட்ட ஒரு இடத்தி லாவது நீர்நிலை உருவாக்கப் பட்டுள்ளதா? குடியிருப்புகளை அகற்றி ஏழைகளை கருவறுக்கும் வேலையை நீதிமன்றங்கள் செய்கின்றன. ஏழை களுக்கு எதிராக நீதிமன்றங்கள் தீர்ப்பு களை வழங்குமானால் அவற்றை முற்று கையிடுவதை தவிர வேறுவழி யில்லை. வீடு இல்லாத மக்கள் நீதி மன்றங்களில்தான் குடியேற முடியும். ஏழைகளுக்கு ஒரு நீதி, பணக்காரர் களுக்கு ஒரு நீதி என்பது அநீதியானது. நீதிமன்றத் தீர்ப்புகளை காட்டி குடியிருப்புகள் அகற்றப்படுகின்றன. உச்சநீதிமன்றம் ‘நீட்’ தேர்வை அமல் படுத்த வேண்டும் என்ற போது அதற் கெதிராக தமிழக அரசு நிலை எடுத்தது. அப்படியெனில் உயர்நீதி மன்ற தீர்ப்பை அரசால் எதிர்கொள்ள முடியாதா? கோவில் நிலங்களில் வசிப்போரிடம் வாடகை வசூலிப்பதை முதலில் நிறுத்த வேண்டும். இவை குறித்தெல்லாம் முதலமைச்சர் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அரசு மக்களுக்கு துணையாக இருக்க வேண்டும். இனி ஒரு வீடு கூட இடிபடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். இந்த மனு கொடுக்கும் இயக்கம் தொடக்கம்தான். மனுக்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல், வீடுகளை இடிப்பது தொடருமானால் அதை ஒன்றாக திரண்டு சென்று தடுப்போம்.
நம்பிக்கை பொய்த்துவிடும்
இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 3 சென்ட் பட்டா நிலம் இல்லாமல், அரசு புறம்போக்கு நிலங்களில் மக்கள் நீண்டகாலமாக குடியிருக்கின்றனர். அந்த நிலங்களை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். இதை அரசு பரிசீலிக்க வேண்டும். நீர்நிலைகளை பாதுகாப்பது என்ற பெயரில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அவகாசம் கூட வழங்காமல் வீடுகளை அகற்றுகின்றனர். மே 5 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் 130 வீடுகளை இடிக்கச் சென்றதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அதில் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்தினார். சென்னையில் பல இடங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளை இடிக்கப்படுகின்றன. 4000 வீடுகள் கொண்ட பெத்தேல் நகர், தாம்பரம் போன்ற பகுதிகளில் வீடு களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நீண்டகாலம் வசிப்போருக்கு வாடகையை பல மடங்கு உயர்த்தி, அதை நிலுவையுடன் சேர்த்து ஒரே தவணையில் கட்ட வேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்களை ஆக்கிரமிப்பா ளர்கள் என்று கூறி வீடுகளை அகற்று கின்றனர். குடியிருப்புகளை இடிப்பது, அகற்றுவது, காலி செய்ய நிர்பந்திப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும்.
மதுரை உயர்நீதிமன்றம் நீர்நிலை யை ஆக்கிரமித்துதான் கட்டப்பட்டுள் ளது. நீர்நிலைகளில் கட்டப்பட்ட குடி யிருப்புகளில்தான் ஐஏஎஸ் அதிகாரி கள் குடியிருக்கின்றனர். வேளச்சேரி, போட்கிளப் போன்ற நீர்நிலைப் பகு தியில்தான் வசதி படைத்தவர்களின் குடியிருப்புகள் உள்ளன. இவற்றை யெல்லாம் கண்டுகொள்ளாமல் ஏழை எளிய மக்களின் வீடுகளை இடிக்க உத்தரவிடுகின்றனர். நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்று வது என்றால் உயர்நீதிமன்ற மதுரை கிளை உட்பட அனைத்தையும் அகற்ற வேண்டும். ஆகவே, ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்றும் உத்தரவிற்கு நீதிபதிகள் தடை விதிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு என்பதற்காக குடியிருப்புகளை அகற்றினால் மக்களுக்கு அரசு மீதுள்ள நம்பிக்கை பொய்த்துவிடும் என்று அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.விஜய ராணியை சந்தித்து தலைவர்கள் மனு அளித்தனர். இந்த நிகழ்வுகளின் போது மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாவட்டச் செயலா ளர்கள் எல்.சுந்தரராஜன் (வட சென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), மாநிலக்குழு உறுப்பினர்கள் நாகைமாலி எம்எல்ஏ, ஏ.பாக்கியம், வே.ராஜசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.கே.முருகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.