tamilnadu

img

மாணவர் அஜித் குமார் பெற்றோருக்கு கே.பாலகிருஷ்ணன் ஆறுதல்

கடலூர், ஆக. 20- பொறியியல் கல்லூரி  மாணவரின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே. பாலகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் மகா பாரதி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவன் அஜித் குமார் கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரி ழந்தார். இதையடுத்து, கல்லூரியின் துறை தலைவர், ஆசிரியர் மீது  வழக்குப் பதிவு செய்யப் பட்டு கைது செய்யப்பட் டுள்ளனர். இந்த நிலையில், அஜித்  குமார் உடல் கள்ளக்குறிச்சி  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற் கூராய்வு முடிந்து பெற்றோரிடம் ஒப்படைக் கப்பட்டது. பின்னர் மாணவரின் உடல் சொந்த ஊரான கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள  வடதலைக்குளம் கிரா மத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக் காக வைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச்  செயலாளர் கோ. மாதவன்,  மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ராமச்சந்திரன், புவனகிரி ஒன்றியச் செயலாளர் ஸ்டாலின், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் செல்லையா, மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ் புவனகிரி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் காளி, கோவிந்தராஜன், பிரபு பரங்கிப்பேட்டை ஒன்றியக் குழு உறுப்பினரும் பு.முட்லூர் ஊராட்சி மன்ற  தலைவருமான ெஜயசீலன்,  அரசு ஊழியர் சங்க அண்ணா மலைப் பல்கலைக்கழக தலைவர் காந்தி உள்ளிட் டோர் அஞ்சலி செலுத்தி னர். அஜித் குமார் தந்தை பழனிவேலை கைபேசியில் தொடர்பு கொண்ட மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆறு தல் கூறினார்.