tamilnadu

img

பெருமுதலாளிகளை வளர்த்துவிட்டதுதான் ஒன்றிய பாஜக அரசின் சாதனை

மக்களைப் பற்றி கவலைப்படும் ஒரே இயக்கம்

‘‘கவுதமபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலம்காலமாக குடியிருந்தவர்களை மாற்று இடம் வழங்காமல் அப்புறப்படுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தால் புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கப்பட்டது. பின்னர் அதற்கும் பயனாளி 1.5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று அரசு கூறியது. அதற்கு எதிராகவும் கட்சி தொடர் போராட்டத்தை முன்னெடுத்ததின் விளைவாக தற்போது மிகவும் குறைந்த கட்டணத்தில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் மார்க்சிஸ்ட் கட்சி அந்த மக்களுக்காகக் குரல் கொடுக்கும், போராடும், உலகத்தில் எங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அந்த மக்களைப் பற்றியும் கவலைப்படும் ஒரே இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சிதான்’’

சென்னை, நவ. 10- பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கியதும், கார்ப்ப ரேட்டுகளையும், பெரு முதலாளிகளை யும் வளர்த்து விட்டதும்தான் பாஜக வின் சாதனை என சென்னையில் நடை பெற்ற கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்டக் குழு சார்பில் செஞ்சட்டை பேரணியும், பொதுக் கூட்டமும் கொளத்தூரில் புதனன்று (நவ. 9) நடைபெற்றது. கொளத்தூர் பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டு கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகி ருஷ்ணன் பேசியதாவது:   உலகில் பல நாடுகளில் ஆட்சி கள் மாறினாலும் காட்சிகள் மாற வில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சோவியத் யூனியனில் ஏற்பட்ட புரட்சி அந்த காட்சிகளை மாற்றி சரித்திரம் படைத்தது. உலகில் முதன்முறையாக உழைப்பாளி மக்கள் தலைமையில் ஆட்சி அமைந்தது. அதனுடைய தாக்கம் உலகின் 8 திசைகளிலும் பிரதி பலித்தது. 1917ஆம் ஆண்டு நடை பெற்ற அந்த புரட்சிக்குப் பிறகு இந்திய விடுதலை வீறுகொண்டு எழுந்தது. அடிமைப்பட்டு கிடந்த பல நாடுகள் புத்துணர்ச்சி பெற்றன. அடுத்த 50 ஆண்டுகளில் காலனி அதிக்க முறைக்கு  முடிவு கட்டப்பட்டது. பிரிட்டிஷ் சாம்ரா ஜ்ஜியத்தில் சூரியனே மறையாது என்று கூறுவார்கள். அதற்கு முடிவு கட்டியது சோவியத் யூனியன்தான். இந்தியா உள்ளிட்ட 3ஆம் உலக நாடுகள் மகத்தான வளர்ச்சி பெறச் சோவியத் யூனியன்தான் காரணம்.  சோசலிச பொருளாதாரம் இந்தியா 1947இல் விடுதலை பெற்றது.

சீனா 1949இல் விடுதலை அடைந்தது. ஆனால் இன்று சீனா பொருளாதார வளர்ச்சியில் உலகின் முன்னணி நாடாக உள்ளது. அங்கு மனி தனின் சராசரி உயிர் வாழும் வயது 80. ஆனால் இந்தியாவின் பொருளா தாரம் எங்கே இருக்கிறது. நாளுக்கு நாள் அடிபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சீனா பொருளா தாரம் நாளுக்குநாள் முன்னேறக் காரணம் மார்க்சிய தத்துவமும், சோச லிச கொள்கைகளும்தான். 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது நாம் பயன்படுத் திய தேசியக் கொடி சீனாவில் தயாரிக் கப்பட்டது. மேக் இன் இந்தியா என்று கூறும் மோடியால் ஏன் அந்த தேசியக் கொடியைக் கூட இந்தியாவில் தயா ரிக்க முடியவில்லை எனக் கேள்வி எழுப் பினார். பெண்களின் பெருமை குறித்தும், பெண்களின் பண்பாடு குறித்தும் அடிக்கடி பேசும் மோடி ஆட்சி யில்தான் பில்கிஸ் பானு வழக்கில் பாலி யல் குற்றவாளிகள் 11 பேர் விடு தலை செய்யப்பட்டுள்ளனர். குஜராத் தில் நடைபெற்ற கலவரம் மிகக் கொடூர மானது. இஸ்லாமியப் பெண்களை விரட்டி விரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது மதவெறி கும்பல். முன்னாள் நாடாளுமன்ற உறு ப்பினர் கொலை செய்யப்பட்டார். சகோதரர்களாக உறவாடி வந்தவர்களி டையே மதவெறியை ஊட்டி மிகப் பெரிய கலவரத்தை ஏற்படுத்தியது ஆர்எஸ்எஸ், பாஜக. அதேபோல் நாடு முழுவதும் மதவெறியைக் கிளப்பி மக்களைப் பிளவுபடுத்தப் பார்க்கி றார்கள். யார் மீது கவலை பாஜகவோடு கூட்டணி அமைக் காத ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிதான். ஏனென்றால் அது ஒரு மதவாத பாசிச கட்சி. பாசிச ஆட்சியில் நாடு வளர்ச்சி அடையாது. கார்ப்ப ரேட் நிறுவனங்களும், பெரு முதலாளி களும்தான் வளர்ச்சி பெறுவார்கள்.                             (தொடர்ச்சி 2ம் பக்கம்)