திருவாரூர் மார்ச்-10 தற்போது நடைமுறையில் உள்ள போக்சோ சட்டம் குற்றம் இழைப்பவர்களுக்கு அச்சம் தரும் வகையில் சிறந்த சட்டமாக இருந்த போதும் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே நீடிக்கிறது. காவல்துறையும் நீதிமன்றங்களும் ஆதாரம் இல்லை என்ற பெயரில் குற்றவாளிகளை தண்டிக்காமல் விடு வது வேதனையளிப்பதாக உள்ளது என சட்டமன்ற முன்னாள் உறுப்பின ரும் மாதர் சங்க மாநில துணைத் தலைவருமான கே.பாலபாரதி குற்றம்சாட்டினார். திருவாரூரில் வியாழக்கிழமை யன்று தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அவர் பேசியதாவது:
‘‘இந்த மண்ணைச் சேர்ந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மை யார், மணலூர் மணியம்மை போன்ற வர்கள் பெண் விடுதலைக்காக போராடிய சிறப்புக்குரியவர்கள். இன்று பெண்கள் போராடுவதற்கும், அவர்கள் போராடியதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. அன்று அவர்கள் பெண்ணடிமைத்தனத்திற்குள் சிக்குண்டு அதற்காக போராடி யவர்கள். இன்று அந்த அளவிற்கு அடிமைத்தனம் இல்லாத சூழலில் நாம் போராடிக் கொண்டிருக் கின்றோம். அவர்கள் போராட்ட பாதை யில் நமக்கான வாழ்க்கை அமைந் துள்ளது. பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் இன்றளவும் அதிகரித்த வண்ணம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு குழந்தைகள் பாதுகாப்புக்குழு பெண் குழந்தைகளின் நிலைமை குறித்து ஆய்வு மேற்கொள்ள வரு கை தந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எங்களைப்போன்ற வர்களுக்கு அனுமதி இல்லை. அதே நேரத்தில் அந்த கூட்டத்தில் ஒரு ஆண்டில் மட்டும் 700 சம்பவங்கள் மூலமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 3, 4 வயது சிறுமிகள் உட்பட 487 குழந்தை கள் மரணம் அடைந்ததாக நெஞ்சை உருக்கும் தகவல் கிடைத்தது.
இந்த சம்பவங்கள் நீதிமன்றத் திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 20 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். 157 பேர் விடுதலை அடைந்தனர். மற்றவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை. நீதிமன்றத்தில் வாதாடிய காவல்துறை ஆதாரங்கள் இல்லை என்று கை விரித்தது. நீதிமன்றமும் அதனை ஏற்றுக் கொண்டது. மரணம் அடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் பல்வேறு வகையில் அச்சுறுத்தப்படுகிறார்கள். அதன் காரணமாக பல வழக்குகள் வலு விழந்து போகிறது. கடந்த ஓராண்டு மட்டும் நாடு முழுவதும் பாலியல் வன் கொடுமை காரணமாக 37 ஆயிரம் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
போக்சோ சட்ட சிறப்பு
தற்போது கொண்டுவரப் பட்டுள்ள போக்சோ சட்டமானது பல்வேறு வகையிலும் சிறப்பானது. பெண் குழந்தைகளுக்கு பாது காப்பானது. உடல் ரீதியான பாலி யல் வன்முறை மட்டுமல்லாது, தவ றான சைகைகள், கேலி கிண்டல் கள் ஆசை வார்த்தை கூறுவது, குழந் தைகளை மிட்டாய் கொடுத்து அழைப்பது, தொடுவது போன்ற எத்தகைய செயல்களில் ஈடுபட்டா லும் புகாரின் பேரில் அவர்கள் உடனடியாக குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகிறார்கள். ஏனைய வழக்குகளில் குற்றத் தில் ஈடுபடுவர்கள் குற்றம்சாட்டப் பட்டவர்களாக கருதப்பட்டு உரிய ஆதாரங்களின் பேரில் தண்ட னை கிடைத்தால் மட்டுமே குற்றவாளி களாக அறிவிக்கப்படுகிறார்கள். இவ்வளவு சிறப்பான ஒரு சட்ட மாக இருந்தாலும் கூட இன்றளவும் கூட பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனை நாம் ஒன்றிணைந்து எதிர்க்கவேண்டும், முறியடிக்க வேண்டும். சமூகத்தில் பெண்களை பல்வேறு வகைகளில் வேற்றுமைப்படுத்தி எல்லா வகை யிலும் அவர்கள் கீழானவர்கள் என்று எண்ணக்கூடிய அளவிற்கு சமூக கட்டமைப்பு உள்ளது. மேலும் குலதெய்வங்களாக பெண்களையே வழிபட்டால் கூட நடைமுறை வாழ்க்கையில் அவர்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் இல்லை என்னும் போக்கு உள்ளது. இவை அனைத்தையும் ஆண், பெண் இருபாலரும் முறியடித்து சமத்துவமான சமுதாயம் படைக்க இந்நாளில் உறுதியேற்போம்’’ இவ்வாறு அவர் கூறினார். விழாவில் மாநில செயலாளர் குரு.சந்திரசேகரன், மாவட்ட செய லாளர் வி.முனியன், மாவட்ட இணைச் செயலாளர் பி.புவனேஸ்வரி, மாவட்ட துணைத்தலைவர்கள் ஆர்.தமிழரசன், ஏ.பெத்தபெருமாள், கே.பாலசுப்ரமணியன், மாவட்ட பொருளாளர் கோ.மீனாட்சிசுந்தரம், ஓய்வு பெற்ற மருத்துவர் மு.வஜி ஹா நாச்சியார், ஓய்வு பெற்ற சமூக நலத்துறை அலுவலர் எஸ்.கஸ்தூரி, திருவாரூர் ஒன்றிய தலைவர் ஆர்.சீதாலெட்சுமி உட்பட 300-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.