திண்டுக்கல், ஜன.1- மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டு வந்த 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்சவரம்பு சட்டத்தை அமலாக்க முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். பழனியில் வெள்ளியன்று மாலை நடை பெற்ற பஞ்சமர் நிலம் மற்றும் உபரி நில மீட்பு மாநாட்டில் கலந்து கொண்டு கே.பாலகிருஷ் ணன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: பஞ்சம், பசி இல்லாத சமூகமாக இந்த நாடு விளங்க வேண்டும் என்று சொன்னால் நிலங்களைப் பிரித்து மக்களுக்கு தர வேண்டும். உழைப்பவன் கையில் நிலம் இருக்க வேண் டும். இது ஒரு அடிப்படை ஜீவாதாரமான பிரச் சனை ஆகும். வெளிநாட்டில் இருந்து வந்து முத லீடு செய்தால் மட்டும் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுவிடாது. பன்னாட்டு முதலாளிகளுக் கும், உள்நாட்டு முதலாளிகளுக்கும் சலுகை மேல் சலுகை கொடுத்தால் தொழில் வளர்ந்து விடாது. உழைப்பாளி மக்கள் கையில் எப் போது வருமானம் வருகிறதோ அன்று தான் தொழில் வளர்ச்சி ஏற்படும். அதற்கு அவன் கையில் நிலம் வர வேண்டும். ஆதி திராவிட மக்களுக்கு பஞ்சமர் நிலம் கொடுக்க வெள்ளைக்காரர்கள் உத்தரவிட்டார் கள். பழனி பகுதியில் அந்த மக்களிடம் பஞ்ச மர் நிலம் இருக்கிறதா? 90 விழுக்காடு பட்டிய லின மக்கள நிலம் இல்லாத அப்பாவிகளாக உள்ளனர். பிற்படுத்தப்பட்ட மக்களில் கணி சமானவர்கள் நிலமற்றவர்களாக உழைப் பாளிகளாக உள்ளனர். உழைப்பாளிகளை சாதி யைச் சொல்லி ஒன்றுசேர விடாமல் பிரித்து வைக்கிறார்கள்.
முன்னாள் அதிமுக எம்.பி.,எம்எல்ஏ பெயரில் 160 ஏக்கர் நிலம்
2005 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பெரியம்மாபட்டியில் நெய்காரபட்டி ஜமீ னுக்கு சொந்தமான 5 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்று உச்சவரம்பு சட்டம் கூறு கிறது. நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதே ஊரில் உள்ள ராமசாமி, குப்புசாமி என்ற பெய ரில் பட்டா வாங்கிக்கொண்டு அந்த நிலத்தை மீண்டும் அவரே வைத்துக் கொண்டுள்ளார். பட்டா ஊர்க்காரர்கள் பெயரில் உள்ளது. ஆனால் நிலம் அதே ஜமீன் குடும்பத்திடம்தான் உள்ளது. முன்னாள் அதிமுக எம்.பி. பெயரில் 60 ஏக்கர் நிலம் உள்ளது. முன்னாள் அதிமுக எம்எல்ஏ பெயரில் 100 ஏக்கர் நிலம் உள்ளது. நிலம் இல்லாத ஏழைக்கு நிலம் கொடு என்று சட்டம் வந்தது. ஆனால் அந்த நிலத்தை அவர்களே வேறுவகையில் பறித்துக்கொண் டார்கள். அந்த நிலத்தை மீட்கக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாக நிலமீட்பு போராட்டத்தில் பெரியம்மாபட்டியில் இறங்கி யது. அங்கு வந்த அதிகாரிகள் பினாமி பெய ரில் உள்ள 500 ஏக்கர் நிலத்தை கைப்பற்றித் தரு கிறோம் என சொன்னார்கள். அப்படி எழுதிக் கொடுத்த பத்திரம் எங்களிடம் உள்ளது. அதற்கு பிறகு கொஞ்சம் பேருக்கு நிலம் கொடுத்தார்கள். உபரி நிலத்தை எடுத்துக் கொடுப்பதற்கு அதிகாரிகளுக்கு என்ன தயக்கம்?
பஞ்சமி நிலத்தை மீட்போம்!
காமராஜர் ஆட்சிக் காலத்தில் 35 ஸ்டாண் டர்டு ஏக்கர் சட்டம் கொண்டு வந்தார். கூடுத லாக நிலம் வைத்திருந்தவர்கள் பினாமி பெய ரில் மாற்றினார்கள். லட்சுமி என்ற பசுமாட்டு பெயரில் கூட பினாமியாக 17 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்தனர். ஏழை எளிய மக்கள் சட் டத்தை மீறினால் அரசு விட்டுவிடுமா? இந்த உச்சவரம்பு சட்டங்கள் நாடாளுமன்றம், சட்ட மன்றம், சட்டமேலவையில் இயற்றப்பட்ட சட் டங்கள் தான். இதை அமலாக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள நிலங்களை வசதிபடைத்தவர்கள் ஆக்கிரமித்து உள்ள னர். எங்கெல்லாம் பஞ்சமி நிலம் இருக்கிறதோ அந்த பஞ்சமி நிலத்தை மீட்க களத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. அது தான் அந்த மக்களுக்கான விமோசனம். கலைஞர் ஆட்சியில் 15 ஸ்டாண்டர்டு நிலம் உச்சபட்சம் என்று அறிவித்தார். அதற்கு மேலே உள்ள நிலங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று சொன்னார். அந்த சட்டத்திற்காக பல கட்ட போராட்டங்களை நடத்தியது தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், விவசாயத் தொழிலாளர் சங்கமும்தான். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக லாம் என்ற சட்டத்தை முதன்முதலில் கொண்டு வந்த பெருமை கலைஞரை சாரும். ஆனால் கேர ளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசு 356 பேரை அர்ச்சகர்களாக பணிநியமனம் செய்தது. அதன்பிறகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் ஆட்சியில் போட்ட சட்டத்தை நிறைவேற்றினார். உண்மையி லேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முத லமைச்சரை மனமாரப் பாராட்டுகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட் டத்தை அமலாக்கியதைப் போல டாக்டர் கலை ஞர் கொண்டு வந்த 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்சவரம்பு சட்டத்தையும் அமல்படுத்தி நில மற்ற ஏழைகளுக்கு நிலங்களை வழங்க வேண் டும். இவ்வாறு அவர் பேசினார். (ந.நி.)