கே.பாலகிருஷ்ணன், கனிமொழி, ஸ்ரீமதி டீச்சர், உ.வாசுகி பங்கேற்பு
நாகர்கோவில், ஜூன் 15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனக ராஜ் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாடு வரும் 25 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தக்கலையில் நடக்கி றது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி, கேரளா முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீமதி டீச்சர், சிபிஐ(எம்) மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். சாதி, மதம் என பல்வேறு கார ணங்களின் அடிப்படையில் பெண்கள் மீதான தாக்குதல் மற்றும் பாலியல் கொடுமைகள் நாட்டில் அதி கரித்துள்ளது. இந்தியாவில் குடும்ப வன்முறையால் பெண்கள் பெருமள வில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சாதா ரண பெண்களுக்கு மட்டுமல்ல நாட்டில் உள்ள வீராங்கனைகளுக்கும் பொருந் தும். இந்தியாவுக்காக பதக்கங்களை பெற்றுத் தந்த மல்யுத்த வீராங்கனைகள் தில்லியில் நடத்தி வரும் போராட்டத் திற்கு ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் சமூகத்தில் 3-இல் ஒரு பகுதி பெண்களுக்கு இடஒதுக்கீடு சாத்திய மாகவில்லை. பல உள்ளாட்சி அமைப்பு களில் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட் டால் ஆட்சி செய்வது அவர்கள் அப்பா, கணவன், அண்ணன், தம்பியாக தான் இருக்கிறார்கள்.
வேலை செய்கிற பெண்களுக்கு வேலை இடங்களில் கூட பாலியல் கொடுமைகள் நடக்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை அளித்த தாக குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான புகார் வழக்கில் வரும் 16 ஆம் தேதி தீர்ப்பு என அறிவிப்பு வெளியாகி யுள்ளது. உயர் பதவியில் இருக்கும் பெண்களும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இங்கு பெண் கள் இரண்டாம் குடிமக்களாக தான் பார்க்கப்படுகிறார்கள். தற்போது சங்பரிவார்கள் பெண் களுக்கு எதிரான கருத்துக்களை விதைக்கின்றனர். குழந்தை திரு மணத்தை எதிர்த்து பேசினால், தமிழ்நாட்டின் ஆளுநரே நானும் குழந்தை திருமணம் செய்து கொண் டேன் என்று குழந்தை திருமணத்தை ஆதரித்து பேசுகிறார். வீட்டு வேலை களை செய்வது மட்டுமே பெண்கள் பணி என ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கூறு கிறது. இது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். பெண்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பெண்களின் சுயமரியாதை, உரிமை கள் மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை எல்லாம் வலி யுறுத்தி தான் இந்த மாநாடு நடத்து கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி, முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், நிர்வாகிகள் உள்பட ஏராள மானவர்கள் கலந்து கொண்டனர்.