ஜூன் 19 - தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்
வைகோ உட்பட 6 பேரின் பதவிக்காலம் முடிகிறது
துதில்லி, மே 26 - தமிழகத்தில் இருந்து மாநிலங்கள வைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடி வடைய உள்ள நிலையில், அந்த இடங்களுக்கு ஜூன் 19 அன்று தேர்தல் அறி விக்கப்பட்டு உள்ளது. வைகோ (மதிமுக), எம். சண்முகம், எம். முகமது அப்துல்லா, பி. வில்சன் (திமுக), என். சந்திரசேகரன் (அதிமுக), அன்புமணி ராமதாஸ் (பாமக) 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 அன்று முடிவடைகிறது. இதையடுத்து, இந்த 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் திங்களன்று (மே 26) வெளியிட்டது. இதன்படி, ஜூன் 2 அன்று வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு ஜூன் 9 கடைசி நாள். ஜூன் 10 அன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 12 இறுதி நாளாகும். போட்டி ஏற்படும் பட்சத்தில், ஜூன் 19 (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதேபோல், அசாம் மாநிலத்தில் காலி யாகவுள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலும் ஜூன் 19 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.