tamilnadu

img

நீதியின் பக்கம் நின்றவர் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்

சென்னை, நவ. 12- மனிதர்களின் பக்கமும் நீதியின்  பக்கமும் நின்று மக்களின் பிரச்சனை களில் தலையிட்டவர் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் எம்ஏ பேபி தெரிவித்தார். மதராஸ் கேரள சமாஜத்தில், முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிரு ஷ்ணய்யர் நினைவு நூலக திறப்பு  விழாவும், மதராஸ் கேரள சமா ஜத்தின் எஜூகேஷனல் சாரிடபிள் டிரஸ்ட் நூலகத்தின் முன்னாள் சேர்மன் இ.பி.ஜி.நம்பியார் படத் திறப்பு விழாவும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நூல கத்தை திறந்து வைத்து எம்.ஏ.பேபி பேசுகையில், “சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் உள்ளிட்ட பல்வேறு மகத்தான சிந்தனையாளர்கள்,

அறிஞர்கள் குறித்து புரிந்துகொள்ள புத்தகங்கள் மூலம் மட்டுமே முடியும். அத்தகைய அரிய புத்தகங் கள்   கிடைக்கப்பெறும் களஞ்சியமாக   நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் பெயரில் இந்த நூலகம் உரு வாக்கப்பட்டிருப்பது, புதிய தலை முறையினருக்கு அளிக்கப்படும் மகத்தான  நன்கொடையாகும்”. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த போது வி.ஆர்.கிருஷ்ணய்யன் அளித்த தீர்ப்புகள் வரலாற்று சிறப்பு  மிக்கவை என்றும் இன்றும் பல்வேறு  வழக்குகளுக்கு அவரது தீர்ப்புகள் வழிகாட்டியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.  

இந்த நிகழ்ச்சியில் இ.பி.ஜி.நம்பியார் படத்தை பி.கே.என்.பணிக்கர் திறந்து வைத்தார்.கேரள சமாஜத்தின் தலைவர் எம்.சிவதாசன் பிள்ளை தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சமாஜத்தின் பொதுச் செயலாளர் டி.ஆனந்தன், பொருளாளர் ஏ.வி.அனூப், பில்டிங் டிரஸ்ட் செயலாளர் கும்பளங்காடு உன்னிகிருஷ்ணன், இலக்கியப் பிரிவு செயலாளர் எம்.வி.தாமோதரன், கேரள வித்யா லயா எஜூகேஷன் சொசைட்டி செயலாளர் கே.மேத்யூ, சுகாசினி, டீச்சர் எஜூகேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் ஆர்.கே.ஸ்ரீதரன் ஆகியோரும் பேசினர்.